Wednesday, January 14, 2015

அதியர் & மழவர் யார் - ஆதாரப்பூவமான வரலாறு படிப்போம்

வணக்கம். இந்த பதிவானது எந்தவொரு இனக்குழுவையோ, சாதியையோ தூக்கி நிறுத்த அல்ல. சிலரின் பேராசைக்காகவும், அவர்கள் வலையில் வீழ்ந்தவர்களை மீட்டெடுப்பதற்கும், ஒரு வரலாற்று மாணவனாக, என்னால் முடிந்த ஒரு வரலாற்று கடமையை ஆற்றியுள்ளேன். மழவர் என்ற பதத்தை ஒரு இனமாகவும், அரிகண்டம், நவகண்டம் போன்றவைகள் அதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த நாசகாரர்கள் தங்களது மட்டுமே என திரித்துக்கொண்டிருப்பதையும், அதன் காரணம் வல்வில் ஓரி & சேரர் இருவரையும் தங்கள் சாதி என வரலாறை திரிக்க எந்த அளவிற்கும் (போலி ஆவணங்கள் தயாரிக்கும் அளவிற்கும்) துநிந்துவிட்டதை காண சகிக்காது, இந்த பதிவை எழுதுகின்றேன். இந்த பதிவிலும் சில பிழைகள் இருக்கலாம். ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க, ஒரு வரலாற்று கருத்து வலுப்பட / பொய்த்துப்போக வாய்ப்புகள் உள்ளது. அதுபோல், அதியரின் வரலாறு & anthropology ஆகியவற்றை ஆராயும் ஆர்வலர்களுக்கு, இந்த பதிவு பெரும் உதவி புரியும் என நம்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான். அதியரின் வரலாற்றில் தீவிரவாதிகளின் திரிபை கடந்து வரலாறு படிப்பவர்களுக்கு என்னால் முடிந்த பிள்ளையார் சுழியை இப்பொழுது இடுகிறேன். எடுத்ததும் சதம் அடிக்க முடியாது. சுழியத்தில் இருந்து ஒன்றுக்கு முன்னேற இந்த பதிவு வழி வகுக்கும். அதற்கு நான் பொறுப்பு. மேலும் தரமான தகவல்கள் கிடைக்க கிடைக்க, அடுத்து வரும் பதிவுகளில் சேர்க்கப்படும். திரிபுகளை கடந்த வரலாறுக்கு உங்களை வரவேற்கிறேன். நன்றி


மழவர் - திரிபுகளும் தெளிவும்

மழவர் என்பது ஒரு இனமா? அப்படியானால் மழவன் என்று புகழப்பட்ட அதியமானும், ஓரியும் ஒரே இனமா??? என்று கேள்விகள் எழலாம். அது இயல்பு. ஆனால் சுயநலத்திற்க்காக அது ஒரு இனமே என்று பரப்புரை செய்வதோடு நில்லாமல், போலியான ஆவணங்கள் தயாரிப்பதெல்லாம் எவ்வளவு ஈனமான செயல்கள்! சரி. விஷயத்திற்கு திரும்புவோம்
சத்தியமாக இல்லை. மழவர் என்பது ஒரு இனம் அல்ல. அது ஓயாது போரில் ஈடுபடும், போரின் காரணமாய் பரதேசம் செல்லும் இளம் படை வீரர்களை குறிக்கும் ஒரு பதமே. இதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் கொடுக்கிறேன்.

1)  மழகொங்கம் மழவர்களுடைய பகுதி. ஆனால் மழவர் தனிக்குடியல்ல. எல்லாப் பழங்குடியிலும் இருந்த "இளம்" வீரர்கள் என்று புகழ்பெற்ற கல்வெட்டு ஆய்வாளரும், தமிழக தொல்லியல் துறையில் பல நூல்களை வெளியிட்டு முத்திரை பதித்தவருமான பூங்குன்றன் அவர்கள் தன் "செங்கம் நடுகற்களில் தொறுப்பூசல், தொல்குடிகள், அரசியல்" எனும் நூலில் உரைத்துள்ளார்.

2)  இதே கருத்தை 300 வருடங்கள் கப்பம்கட்டாத மன்னர்களாக, சுயமாக செங்கோலோச்சிய கொங்கு சோழர்களை பற்றி ஆராய்ந்து தொகுத்த முனைவர் புவனேஸ்வரி, தனது "கொங்கு சோழர்" நூலில் பூங்குன்றனின் கருத்தை முன்மொழிவதொடு நில்லாமல், காமூர் தலைவன் கழுமுள் மழவனே என்றும் குறிக்கிறார். கழுமுள் இன்றைய காங்கயம் வட்டத்தில் இருந்த ஊர் என்பது அனைவரும் அறிந்ததே.

"கொங்கு சோழர்" , முனைவர் புவனேஸ்வரி

3)  முனைவர் வீ. மாணிக்கம் அவர்கள் எழுதிய "Kongu Nadu, a History Up to A.D. 1400" என்ற ஆங்கில நூலிலும், அவரே ஆக்கிய அதன் தமிழ் பிரதியிலும் "சேரனின் கிளைக்குடியான அதியரையும் ஒரியையும் மழவர் என்ற பதத்தை வைத்து ஒரே இனம் என்று கருதுவது அர்த்தமற்றது" என உரைத்துள்ளார். மேலும் மழவர் என்பதற்கு வீரன் என்ற உண்மையையும் கூறுகிறார்.
"Kongu Nadu, a History Up to A.D. 1400"
இப்படி கொங்கதேசத்தை எவர் ஆராய்ந்தாலும், இந்த முடிவுக்குத்தான் வருவர். சரி. மழவர் என்பது இனமல்ல என்பதும், அது போர் வீரரை குறிக்கும் பதம் என்பதும் நிரூபணம். பின்னர் யாரப்பா அந்த அதியர் என்று கேட்பீரென்றால், அதனையும் விளக்குகிறேன்

சத்திய புத்திரர்

பொதுவில் சத்தியபுத்திரன் என்றால், வாய்மை தவறாதவன் என்று பொருள் வருவதால், அதியரை சூரிய வம்சத்து சத்தியவிரதன் மகன் பொய் கூறா அரிச்சந்திரன் வம்சம் என்றும், அதியர் வேளிர் மரபினர் அல்ல என்றும் அவர்கள் போரில் அதிகம் ஈடுபடுதளாலும், வாய்மொழி கோசர் என்று சங்க இலக்கியம் குறிப்பதால், கோசர் மரபினர் என்றும் ஆதாரமற்ற கோட்பாடுகளை ட்றெவீடிய கதையாசிரியர்கள் எழுதினர், எழுதுவர். இதன் பின்னணி அதியர் வேளிர் என்றால் அவர்கள் முன்னோரான சேரரும் வேளிரே என்று நிரூபணமாகிவிடும் என்பதால், அதற்கு வாய்ப்பளிக்காது இந்த யுக்தியை ட்றேவீடிய தீவிரவாதிகள் கையாளுகின்றனர்.
ஆதலால் இப்பொழுது சத்திய புத்திரர் என்றால் என்ன என்று பார்ப்போம்.
சத்தியபுத்திரன் என்பதே அதியமான் என்று பொருள் தரக்கூடிய வடமொழியாக்கம் தான்
சத்தியபுத்திரன் என்பதை இப்படி பிரிக்கலாம்
சத்தியபுத்திரன் = ச + திய + புத்திரன்.
"அ" என்ற தமிழ் எழுத்து வடமொழியில் "ஹ" என்றும், பாலியல் "ச" எனவும் மாற்றம் பெற்றது வரலாறு.
மான் என்றால் மகன் என்று பொருள்.

அதியமான்             = அதியன் மகன் 
வேண்மான்            = வேள் மகன் 
வேண்மாள்             = வேள் மகள்
தொண்டைமான்    = தொண்டையன் மகன்
மலையமான்           = மலையன் மகன்

இப்படியாக "அ + திய + மான்" என்ற சொல், "ச + திய + புத்திரன்" என வழங்கியது.
இதனை UNESCO வின் South Asian History and Heritage பிரிவுன் Director ஆக பணியாற்றிய இந்தியாவின் மாபெரும் வரலாற்று அறிஞர்களுள் சிறந்தவரான நீலகண்ட சாஸ்திரியாரும், சேஷ ஐயரும், பர்ரோவும் நிரூபித்துள்ளதுமட்டுமல்லாமல், இதனை வரலாற்று அறிஞர்களின் விவாத கூட்டத்தில் இந்த கருத்து அனைவராலும் ஏறுக்கொள்ளவும்பட்டது.
இதனை முனைவர் வீ. மாணிக்கம் அவர்கள் எழுதிய "Kongu Nadu, a History Up to A.D. 1400" என்ற ஆங்கில நூலிலும், அவரே ஆக்கிய அதன் தமிழ் பிரதியிலும் வெளிவந்ததை கீழே கொடுத்துள்ளேன்
"Kongu Nadu, a History Up to A.D. 1400"

ஜம்பை கல்வெட்டு

இந்தியாவின் பெரும் வரலாற்று அறிஞர்களால், மொழி இந்த இலக்கணப்படி இப்படி தெரியும் என்று விளக்கி, அதியமான்களே அசோகனின் கல்வெட்டில் குறிப்பிடும் சத்தியபுத்திரர் என்று நிறுவினாலும், தமிழகத்தை பொருத்தவரை, நாசகார கும்பல்களால் அந்த கருத்து இருட்டடிப்ப்பு செய்யப்பட்டது, அதியனின் இந்த தமிழ் பிராமி கல்வெட்டு கிடைக்கும் வரை.
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது. குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில், காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது. கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது. இக்கல்வெட்டு உள்ள இடத்தில் "ஆள் ஏறாப்பாறை", "சன்யாசி மடம்", "தாசி மடம்" என்று இடங்களுண்டு. 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வு மாணவர் ஒருவரால் இக் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குனராக இருந்த ஆர். நாகசாமி இதனை ஆய்வு செய்து ஆங்கில நாளிதளொன்றில் கட்டுரையாக வெளியிட்டார்.
ஸதிய புதோ என்று வருவது அதியமான் என்பதே என்றும், ஒரே கல்வெட்டில் "ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி" என்று வருவதால், இது வரலாற்றில் ஒரு முக்கியமான கல்வெட்டாக குறிக்கப்படுகின்றது.
இது பற்றி மேலும் அறிய தமிழ் இணைய பல்கலை கழக பக்கம், நாகசாமி அவர்களின் வலைத்தளம் மற்றும் தமிழ் விக்கி பக்கத்தினையும் கீழே இணைத்துள்ளேன்.
1) தமிழ் இணைய பல்கலை - ஜம்பை கல்வெட்டு், முனைவர் மா.பவானி, உதவிப் பேராசிரியர், கல்வெட்டியல் துறை

2) ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு, முன்னாள் தொல்லியல் துறை தலைவர் நாகசாமி

3) தமிழ் விக்கீபீடியா

அதியர் - மூலம் & தோற்றம்

அதியர் என்ற இனக்குழு, சேரரின் மரபினரே. இதற்கு மேலே குறிப்பிட்ட சான்றுகள் போக, அதியர்கள் பொரித்த கல்வெட்டு சாஸனங்களே இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்.

1)  விடுகாதழகிய பெருமாளின் திருமலை கல்வெட்டு:
வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில் "வஞ்சியர் குலபதி" எழினி என்றும் ,"சேர வம்சத்து அதிகமான் எழினி" என்றும் உள்ளது.
From S.I.I, Vol 1, pg:106

இந்த கல்வெட்டில் இவர்கள் சேர வம்சம் எனும் செய்தியை விடவும் முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. அதனை பிறகு பார்ப்போம்.
இந்த விடுகாதழகிய பெருமாள் பிற்கால சோழர் காலத்தில் சோழரிடம் அண்டி, தம் ஆட்சியை சிலகாலம் நிலைநாட்டிக்கொண்ட அதியர் குடியினர். இவரது தந்தை ராஜராஜ அதியமான் என்பவர். அழகிய பெருமாள் என்பது சேரரை குறிக்கும் பதம். இதில் விடுகாதன் என்பது இயற்பெயராகவும், அழகிய பெருமாள் பட்டமும் ஆகும்.

2)  விடுகாதனது லதிகம் கல்வெட்டு:

சித்தூர் மாவட்டம் லதிகம் / லட்டிகம் என்று இன்று வழங்கப்படும் ஊரில் உள்ள விடுகாதனது கல்வெட்டில் (A.R.E 1906, nos 544, 545, 547), சங்ககால சேரரின் சின்னங்களான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளது. இது இவர்கள் சேரரின் மரபே என்பதனை மேலும் உறுதி செய்கின்றது. இதனை ஆய்வாளர்களும் ஏற்று மேற்கோள் காட்டியுள்ளனர்.

தர்மபுரி நடுகல் அகழ்வைப்பகம், தொல்லியல்துறை
3)  புறநானூறு - 99
பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அவர்கள் முன்னோர்கள் (சேரர்) போல அவர் வழிவந்த அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்பட்டுள்ளது, சங்ககாலத்தில் அதியர் சேரரிடம் இருந்து பிரிந்த வகுப்பினரே என்பதை உறுதி செய்கின்றது.

பாடல் வரிகள்:
---தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல 
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல் 
எழுபொறி நாட்டத்து---

புடையல் = மாலை

4)  குலோத்துங்க சோழன் கல்வெட்டு - குலோத்துங்கசோழ தகடாதரையன் விடுகாதனான சேரமான் பெருமாள்
இதில் விடுகாதனுக்கு குலோத்துங்கசோழ தகடாதரையன் என்ற பட்டமும், சேரமான் பெருமாள் என்ற பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கல்வெட்டில் அதே விடுகாதன் சில ஆண்டுகள் பின்னர் போசளர் / பொய்சாலன் / ஹொய்சாலனுக்கு அடங்கியிருந்தது தெரிகின்றது. இதனைக்கொண்டு அதியரை வீழ்த்தியது ஹோய்சாலரே என்று "வரலாற்றில் தகடூர்" எனும் நூலில் தவறாக எழுதியுள்ளனர். உண்மையை ஆதாரத்தோடு பின்னர் காண்போம்
தமிழக தொல்லியல்துறை வெளியிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு தொகுப்புகள் நூலில் இருந்து

5)  அகராதியே (Tamil Lexicon) அதியனை சேரரின் கிளை என்றுதான் சொல்கின்றது

அதியர் தோற்றம்:
வரலாறு பதியப்பட்ட தொடக்ககாலத்தில் இருந்தே அதியரை பற்றியும், அவர்களோடு போரிட்ட சேரர், வேட்டுவர், மலையர் பற்றியும் செய்திகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. ஆதலால் இவர்கள் சேரரில் இருந்து பிரிந்த காலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு எனவும், காரணம் ஜனத்தொகை பெருக்கம் என்றும் ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். கி.மு 3ஆம் நூற்றாண்டில் இருந்தே வரலாறு பதியப்பட்டது என்பதற்காக, மொத்த வரலாறையும் அந்த காலகட்டதிற்கே சுருக்கிவிடுவதா என்ன??? பெருக்கம் அதிகமானால், வரலாற்றின் கருவூலம் என்று சித்தரிக்கப்படும் மீகொங்கில் என்ன இடமா இல்லை? ஏன் கரை கடந்து மலைகடந்து தகடூர் அடைந்தனர்??? தகடூர் என்பதற்கே தகடையூர் என்றும், தேர்கள் உலாவும் ஊர் என்றும் பொருள் கூறுகின்றனர் வரலாற்று ஆசான்கள். சேர, சோழ, பாண்டிய, வாண, கங்க, நொளம்ப, பல்லவ, சாதவாகன, சாளுக்கிய, ராஷ்ட்டிரகூட போர்களின் கூடராமாய் இருந்த இடம்தான் அதியர் குடிபுகுந்த இடம். ஆக, சேரரின் கிளை ஒன்று போர் நடாத்துவதற்காகவே, போர்களத்தை தங்களகத்தே கொண்டு, எந்த எதிரியையும் உள்ளே வருவதை தடுப்பதற்காகவே அதியர் பிரிந்தனர் என்று கருதலாம். பின்னாளில் சேரரும், அதியரும் மோதிக்கொண்டது கால ஓட்டத்தின் சூழ்ச்சியே.

ஸதியபுதோ = அதியமான் 

கேதலபுதோ = சேரலமான் = சேரலன் மகன்

அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)

அசோகனின் இரண்டாம் கல்வெட்டு Shabhazgarhi (S), Khalsi (K), Girnar (G), Dhauli (D), Jaugarh (J) ஆகிய ஐந்து இடங்களில் காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுகளில் இரண்டாம் வரியில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேதலபுதோ ஆகிய அரசுகளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவற்றில் சில கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. இதில் குறிப்பிடப்படும் சதியபுத்ர (சதியபுதோ) என்று அதியமானையே குறித்தது என அதுத்த தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு இவ்வாறு அமைகிறது.
Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi’s domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras, the Keralaputras, as far as Tamraparni and where the Greek King Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos, …

இவற்றில்Girnar (G) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் இரண்டாம் கல்வெட்டில் இப்பகுதி இடம்பெற்றுள்ளதைப் பிராமி எழுத்துகளில் இங்கு காணலாம். சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டுள்ள நான்கு சொற்களும் முறையே சேட(chEda), பண்டியா(paNdiyA), ஸதியபுதோ(sathiyaputhO), கேதலபுதோ (kEdhalaputhO) என சில எழுத்துப்பிழைகளுடன் இருப்பதைக் காணலாம்.

இதில் முக்கியமான விஷயம் கேரளபுத்திரன் என்று எங்கும் குறிப்பிடவில்லைகேதலபுதோ , அதாவது கேதலன் மகன் என்று குறிபிட்டுள்ளது. இது சேரலனின் திரிபே ஆகும்.

இதற்கு ஆதாரங்களும் உள்ளன.
1)  16ஆம் நூற்றாண்டை சேர்த்த கரபுரநாதர் புராணத்தில், அதியனை சேரலன் என்றே குறிக்கப்படுகின்றது.
பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற் 
காதலாய்க்கருங் காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை செய்து 
வீதலின்மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித் 
தீதிலாக்கனி யொன்றினை யுதவவே சேரலன் மகிழ்வெய்தி.

இந்த வண்கனி யெங்கிருந் தெடுத்தனி ரிதினதி சயமென்னோ 
சிந்தை யுற்றுண ரச்சொலு மென்றலுந் திருவுளங்களி கூர்ந்தே 
அந்த நாட் பிரமன்றரு மலையிதி லதிசய சஞ்சீவி 
எந்த நாட்களு முளதிதை யுட்கொள நரைதிரை யிவைமாற்றும்

- கரபுர நாதர் புராணம்

இது அதியமானை கொங்கு நாட்டான் என்று குறிப்பிடும் கொங்கு மண்டல சதகத்தின் உரையிலும், மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=47


கேரளா = கைராளம்???

அடுத்து கேரளா என்று எப்படி பெயர் வந்தது என்று பார்ப்போம்.
கேரளம் என்று பெயர் வந்ததற்கு சான்றுகள் ஏதும் இல்லாவிடினும், இன்றைய கேரளாவில் 2 கதைகள் வழங்கப்படுகின்றன.
1)  பொன்னானி ஆற்றுக்கு வடக்கே மலபாரில் (குடநாடு & பூழி நாடு) உள்ள நம்பூதிரிகள் கேரம் என்றால் தென்னை, தென்னை மரங்கள் நிறைத்து இருப்பதால் கேரளம் என்று பெயர் வந்தது என்கிறார்கள், இதற்கு ஒரே சான்று என்று அவர்கள் எழுதிய கேரலோபதியை காட்டுகிறார்கள். நாட்டின் நிர்வாகத்தையே சீர்குலைத்து, குடிகளையும் சீர்குலைத்து, அரச்சமரபையே துரத்திவிட்டு புதிதாய் தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட தேசம் ன் சட்டங்களுக்காக அடிக்கல் நாட்ட எழுதப்பட்ட இந்த நூலில் உள்ளவை அனைத்தும் நம்பகத்தகுந்தவன அல்ல. தென்னையை விட பனை மரங்கள் மலபாரில் அதிகம்!
2)  பொன்னானி ஆற்றுக்கு தெற்கே (குட்டநாடு, வேணாடு, ஆய் நாடு) உள்ள நம்பூதிரிகள், தென் கேரளா முன்பு கைராள தேசம் என்று வழங்கப்பட்டது. இங்குள்ள மக்கள் தங்களை இன்னமும் தங்களை கைராளி (Kairali) என்று குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றனர் எனவே கைராளம் தான் கேரளம் ஆனது என்கிறார்கள். இது ஓரளவேனும் உண்மை என்று தோன்றினாலும், இதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை.

வீரகேரளன் = வீரசேரலன்
முடியுடை வேந்தர் அனைவரும் வீர, அதிவீர, ஜெயவீர போன்ற அடைமொழிகளை தங்கள் குலப்பெயரொடு சேர்த்து, வீரசோழன், வீரபாண்டியன், வீரகங்கன், வீரவல்லாளன் (Hoysala),வீர நஞ்சைய உடையார் (mysore wodeiyar - Ursu caste, Vellala off-shoots), ஏன் பல்லவன் எச்சமான தெலுங்கு பேசும் வீரநுளம்பன் கூட வீர என்று இட்டுக்கொண்டபோதும், சேரன் மட்டும் ஏன் வீரகேரளன் என்று கொண்டான்??? பாண்டியன் கூட தன் மகனுக்கு பெயர் சூட்டுபோது, ஒரு காலகட்டத்தில் வீரகேரளன், கொல்லங்கொண்டான் என்றுதான் வைத்தான்!!! ஏன் என்று என்றாவது யோசித்ததுண்டா???
வீரசேரலன் என்பதன் வடமொழி திரிபுதான் வீரகேரளன் என்பது. செங்குட்டுவன் மரபில் வந்த கிளையான வீரகேரளர் என்ற பரம்பரைதான் கொடுங்கொளூரிலும், மிக அதிகமாக கொங்கிலும் பல நூற்றாண்டுகள் ஆண்டன. வீரகேரளன் என்று பெயர் கொண்ட அந்த பரம்பரை மன்னர்கள் 20க்கும் மேல் பிற்கால சோழர் காலத்தில் இருந்துள்ளனர். இதனை நம்பூதிரிகள் ஏன் பேசுவதேயில்லை??? பேசினால் கேரளன் என்பதற்கு அர்த்தம் சொல்ல வேண்டும். அதனால்தான்.
மாந்தரஞ்சேரல் காலத்தில் உருவான ஊர் சேலம். இதனை சேரலம் என்றே வழங்கினர். அனைத்து பட்டயங்களிலும் அப்படித்தான் உள்ளது. சேரல மாநகர் என்று.

ஆக, சேரலன் என்ற பெயர் களப்பிரர் காலத்திலோ அதன் பின்னோ, வடமொழியில் மட்டுமல்லாது, தமிழிலும் கேரளன் என்றே மாறியது என்பது கண்கூடு

இப்பொழுதுதான் அடிப்படையான சில விஷங்களை புரிந்துள்ளீர்கள். இனிமேல்தான் அதியரின் குடிகள் எங்கெல்லாம் பரவி, இன்று யார் யாராக இருக்கிறார்கள் என்பதுவரையான துல்லியமான மூல ஆதாரங்களை அளிக்க உள்ளேன். சுவாரசியமான பகுதியே இனிமேல்தான். அதன்பின்னர் அதியர் குடி அல்லாத மழவ மக்கள் யாரென்றும், கடைசியாக, உண்மையை எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் என்று, உடைக்க உள்ளேன்.

அதியரின் குடிகள்

ஆணித்தரமான ஆதாரங்களுடன் அதியர் என்ற மொத்த இனமும், இதுவரை 6 சாதிகளுக்குள் குறிப்பிட்ட பிரிவினராக ஐக்கியமாகியுள்ளனர். அவர்களில் அதியரின் population, role & weightage ஐ பொறுத்து, கீழே அந்த சாதிகளை தொகுத்துள்ளேன்.
அவை முறையே,
1)  பால வெள்ளாள கவுண்டர் - (கொங்கு வெள்ளாளர் பிரிவு)
2)  செங்குந்த முதலியார்
3)  காரைக்காட்டு / பாண்டிய வெள்ளாளர் (கார்காத்தார்)
4)  செந்தலை வெள்ளாளர் / தென்கரை வெள்ளாளர் - கொங்கு வெள்ளாளர் (பெரும்பான்மையினர்)
5)  நாட்டு வெள்ளாள கவுண்டர் / நாட்டு கவுண்டர் - (தென்கரை கொங்கு வெள்ளாளர் பிரிவு)
6)  நரம்புகட்டி கவுண்டர் / வடகரை வெள்ளாளர் - (கொங்கு வெள்ளாளர் பிரிவு)

இதில் ஒவ்வொரு சாதியிலும், உள்ள அதியரின் பிரிவுகள் யாவை என்பன ஆதாரங்களுடன் விளக்கப்படும்

1) பால வெள்ளாள கவுண்டர் - (கொங்கு வெள்ளாளர் பிரிவு):

இதில் உள்ள "அதிகன்" கோத்திரமே அதியமான் வழியினர்... அதிக என்றும் ஆதிக்க என்றும் கூட திரிந்து வழங்கும்... 

பின்னர் விளக்கப்படும்


2) செங்குந்த முதலியார்:

சோழர் காலத்தில் 75% படைகளை நிரப்பியது இவர்கள்தான். இவர்களில் ஒரு பிரிவு கைக்கோளர். செங்குந்தர் & கைக்கோளர் இருவரின் மூலமும் ஒன்றே ஆனாலும், கைக்கோளர் 9ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சமணர்களாக இருந்தனர், செங்குந்தர் அப்படி இல்லை. மேலும் செங்குந்தரிடம் மட்டுமே அதியர் குடி இணைந்துள்ளது. திருமுனைப்பாடி என்று நடுநாட்டுக்கு பெயர் உண்டு எழுதுகிறார்கள். ஆனால் முனைப்பாடி என்பது முனையர் என்ற இனம் வாழ்ந்த ஊர். முனைப்பாடி நாடு, அவர்கள் பூர்வீக நாடு. இது நடுநாட்டின் தென்பாகம் மட்டுமே. இந்த முனையர் இனமே செங்குந்தரிலும், கைக்கோளரிலும் இணைந்தது. இதற்கு கணக்கிலடங்கா இலக்கிய ஆதாரங்கள் போக, கல்வெட்டு ஆதாரங்களும் உண்டு.
அதேபோல அதியர் குடி செங்குந்தரில் இணைந்ததற்கு கல்வெட்டு ஆதாரம், Anthropology, குடிப்பெயர்கள், இலக்கிய ஆதாரங்களும் கூட உண்டு.
இதனையும் பின்னர் விளக்குகிறேன்.

3)  கார்காத்தார் / காரைக்காட்டு வெள்ளாளர்:

முதலில் இவர்கள் யார் என்று ஒரு சிறிய முகவுரையை பார்ப்போம்.
முன்னுரை:
கார்காத்த வெள்ளாளர், காரைக்காட்டு வெள்ளாளர், காரிக்காட்டுப் பிள்ளை, பாண்டிய வெள்ளாளர் போன்ற பெயர்களால் அறியப்படும் கங்கா குலத்தவர்கலான இவர்களே சங்ககால பாண்டிநாட்டு முத்தூறுக் கூற்றத்து வேளிர்கள். தமிழ்நாட்டில் முற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இச்சாதியினர் தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர். களப்பிரர் காலத்தில் இவர்கள் பௌத்த மதத்தை ஏற்றிருந்தனர். களப்பிரர் காலத்தில் கடல் வணிகம் சிறக்க வணிகர்களோடு சேர்ந்து களப்பிரரை ஆதரித்தவர்களில் இவர்களே மிக முக்கியமானவர்கள். இவர்களோடு பௌத்த மதத்தை ஏற்றிருந்த டெல்டா பகுதி சோழ நாட்டு வெள்ளாளர் சிலரும் களப்பிரர் காலத்தில் இவர்களுடன் ஐக்கியமாகி சோழநாட்டிலும் பௌத்தத்தை சிறக்க வைத்தனர். பின்னாளில் ஆரிய சக்கரவர்த்திகள் இவர்களை திருநெல்வேலியில் அமர்த்தினர். தென்பாண்டி நாடான நெல்லை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலும் நிறைத்து உள்ளனர். களப்பிரர் காலம் முதல் இவர்களுள் அரச குடிகள் (வேளிர் & வேந்தர்) பலர் ஐக்கியமாகியுள்ளதை ஸ்ரீநிவாச ஐயங்கார் முதற்கொண்டு, ஐராவதம் மகாதேவன் வரை வரலாற்று ஆசான்கள் தமது நூல்களில் மேற்கோள் காட்டியுள்ளனர். இவர்களின் பூர்வீகம் கானாடு, கோனாடு, சோணாடு, பாண்டிநாட்டு மிழலை கூற்றம் போன்றவை. இன்றைய புதுகோட்டை மாவட்டம் முழுவதும், ராமநாதபுரத்திற்கு வடக்கு, பட்டுகோட்டைக்கு தெற்கு என அந்த வட்டம் இவர்களது அசைக்கமுடியா கோட்டையாக இருந்தது. பின்னாளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அது சீர்குலைந்தது கள்ளர் குடியேறி பின்னாளில் எழுச்சி பெற்றனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். களப்பிரர் வீழ்ச்சிக்கு பின்னர், காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் சமூக பெண்களை இனப்படுகொலை செய்த ஆத்திரமடங்கா சோழனால், விரக்தியடைந்து, வணிகர் அனைவரும், சோழநாடு கடந்து, பாண்டிநாட்டுக்கு வந்து, மூவேந்தர் உத்தரவுப்படி வெள்ளாள பெண்களை மணந்து, கார்காத்தாரின் கானட்டில் இருந்து, சீதனமாக 74 கிராமங்கள் பெற்று, செட்டிநாடு உருவாக்குகிறார்கள். உருவாக்கிவிட்டு அதற்கு தலைநகராய், காரைக்காட்டு வெள்ளாளரின் காரைக்குடியையும், கானாடுகாத்தான் எனும் ஊரையும் நியமிக்கிறார்கள் என்பது வரலாறு. அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர். இன்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் குலகுரு அவர்கள் மடத்திற்கும், நாட்டுகோட்டை செட்டியார் பெண்கள் கார்காத்தாரின் குலகுருவையே தங்கள் குலகுருவாக கொள்ளும் வழக்கம் (தாயின் பழக்கம் மகளுக்கும்) இன்றும் தொடர்கிறது. நகரத்தார் தம் பெண்களை ஆய்ச்சி / ஆச்சி என வழங்குவதே ஆயர் (ஆய், ஆவி வேளிர்) பெண்களை மணந்ததால்தான் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதனை நகரத்தார் இணையத்திலும் காணலாம்

நாட்டுக்கோட்டை நகரத்தார் குலப் பெண்கள், அதாவது செட்டிநாட்டு ஆச்சிகள் அனைவருமே, கார்கார்த்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் என டாக்டர். திரு. ஏ.சி. முத்தையா செட்டியார் அவர்களின் மனைவி திருமதி. தேவகி முத்தையா, எழுதிய நகரத்தார் வரலாறு குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கார்காத்தார் ஈழத்தையே ஆண்ட வரலாறும் உண்டு. பாண்டியனாக ஆண்ட வரலாறும் உண்டு. தேவைப்படும் பொழுது இதற்கான ஆதாரங்களை கீழே கொடுக்கிறேன். இப்போதைக்கு கார்காத்தார் பற்றி இது போதும். இனி அதியர் - கார்காத்தார் தொடர்பை பார்ப்போம்

பொன்பற்றி / பொன்பற்றியூர் மழவர்கள் கார்காத்த வெள்ளாளர் குடியே:
ஈழத்தில் ஆரிய சக்கரவர்த்தியை அழைத்துவந்து முடிசூட்டி வைத்த பாண்டி மழவன், அவர் தம்பி செண்பக மழவன் ஆகியோர் பொன்பற்றி ஊரை சேர்ந்த கார்காத்த வெள்ளாளர்களே.
1)  இதனை ஈழத்து வரலாற்றை கூறும் 4 தமிழ் நூல்களில் முக்கியமானதான கைலாயமாலை பின்வருமாறு சொல்கிறது:
"சிவநேசச் செல்வனும் அன்னதானம் முதலாய தருங்கள் செய்வதில் அளவில்லாத விருப்ப முடையவனும் மேழிக்கொடி உடையவனும் வேங்கை மலைத் தலைவனும் கார்காத்த வேளாளர் குலத்த வனுமான பொன்பற்றியூர்ப் பாண்டி மழவனையும் அவன் தம்பியையும்"

 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2)  இதே செய்தியினை யாழ்ப்பான வரலாற்று நூலான வைபவமாலையும்  கூறுகின்றது:

இந்த பாண்டி மழவன் என்ற கார்காத்த வெள்ளாளன், சேதிராயன் எனும் மலையமான் சேதிராயன் பரம்பரையை (மலையமான் & நத்தமான் உடையார் சாதி) சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டு ஈழத்துக்கு வந்து தொண்டைநாட்டு வெள்ளாளர் தலைவனாகிய தொண்டைமான் இன்றி அரசனின்றி வாடுவதை கண்டு, பாண்டிய நாட்டில் இருந்த சோழ இளவரசனை பாண்டியன் துணையுடன் கொண்டு வந்ததை யாழ்ப்பான சரித்திரம் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது
சரி. பொன்பற்றி ஊர் காத்த பாண்டி மழவன் கார்காத்த வெள்ளாளன் என்று நிரூபணம்.
பொன்பற்றி:
பொன்பற்றி என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட கார்காத்த வெள்ளாளர் பலர் பல ஊர்களில் "பொன்பற்றி உடையான்" என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். இதற்கு தொண்டைமண்டலம் விதிவிலக்கல்ல.
இந்த வரலாறை சொன்னாள், உங்களுக்கு பொறுமை இருக்காது என்பதால், பொன்பற்றி உடையான் என்ற சொல் காராள வம்சத்தினரை குறிப்பது மட்டுமே என்ற கல்வெட்டை பார்த்துவிட்டு, பொன்பற்றியூர் எங்கு உள்ளது என்பதையும் பார்ப்போம்

காராள பொன்பற்றி உடையார் - பாண்டியன் கல்வெட்டு:
சடையவர்மர் சுந்தரபாண்டியரின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட அரசானை கல்வெட்டில் குளத்தூர் என்னும் ஊரை உகிரையூர் அகத்தீசுவரர் தேவதான நிலங்கள், மனைகள், விருதராஜ பயங்கர விண்ணகரத்து எம்பெருமானின் திருவிடையாட்டம் ஆகியன நீக்கி, மீள்கூற்றத்துக் கீழ்க்கூற்றுச் செய்யானமான விக்கிரமபாண்டிய நல்லூர் பொன்பற்றி உடையார் எடுத்தகை அழகியார் சோலைமலைச் சொக்கரான பல்லவராயருக்குக் குடிநீங்காக் காராண்கிழமையாக நின்றருளிய தேவர் கோயில் நிருவாகத்தார் விற்ற தகவலைத் தருகிறது.
அதாவது பல்லவரையன் என்ற உழுகுடி வெள்ளாளருக்கு குடிநீங்காக் காராண்கிழமையாக விக்கிரமபாண்டிய நல்லூர் பொன்பற்றி உடையார் நிலத்தை விற்றுத்தந்த செய்தி இது. காராண்கிழமையாக என்ற பதம் இவர் உழுவித்துண்ணும் குடி, அதாவது காராள குடி என்று சொல்கின்றது. விக்கிரமபாண்டிய நல்லூர் பொன்பற்றிக்கு அருகில்தான் உண்டு. கல்வெட்டு ஆதாரம் இங்கே 
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1011

பொன்பற்றி ஊர்
பொன்பற்றி என்ற ஊர், திருமிழலைக் கூற்றத்தில் உள்ளது. இந்த திருமிழலைக் கூற்றம் ராஜேந்திரசோழ வளநாட்டில் உள்ளது. இந்த வளநாடு, பாண்டிநாட்டில் உள்ள ராஜராஜ பாண்டிநாட்டில் உள்ளது என ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதசுவாமி கோவில் முதலாம் குலோத்துங்க சோழன் (சாளுக்கி சோழன்) கல்வெட்டில் (A. R. No. 118 of 1947-48) அறியமுடிகின்றது
இன்னமும் குறிப்பாக சொல்லப்போனால், கடலை ஒட்டி, உள்ள கோட்டைப்பட்டினம், தொண்டி (சங்ககால நகரம். குடநாட்டு தொண்டி அல்ல) என்ற ஊரின் அருகில் உள்ளது. இதன் அருகில் உள்ள ஊர்கள் அனைத்தும் மங்கலம் என்ற பெயரோடு முடிவதால், இவை பிரம்மதேயங்கள் எனவும், களப்பிரர் காலத்தில் மங்கை (பெண் தெய்வம்) கோவில்கள் நிறைந்த ஊர்களாக இருந்த பழமைவாய்ந்த பகுதிகள் என்பதனை அறிய முடிகின்றது. 

இந்த பொன்பற்றியூர் இன்று மருவி பொன்பத்தி என்று வழங்கிவருகின்றது. இன்று அது ஆவுடையார் கோவில் தாலுக்காவில் உள்ளது.



மிழலை கூற்றம் - தெளிவு:
மிழலை கூற்றம் என்ற பிரிவு நடுவிற் கூற்றம் எனும் நடுநாட்டிலும் உள்ளது. மலையமான் (உடையார் சாதி) நாட்டுக்கு மழநாடு என்ற பெயர் உண்டு. அது மருவி மலாடு என வழங்குகின்றது. ஆனால் கல்வெட்டில் பார்க்கவ கோத்திர / வம்ஷ (கங்கா குல உட்பிரிவு) நத்தமான் & மலையமான் உடையார்களை மிலாடுடையார் எனவே வழங்குகின்றது. மிழலை கூற்றம் மிலாடு எனவும், மழநாடு மலாடு எனவும் வழங்குவதால், இரண்டும் ஒரே பொருள் என்றும், மழவர் (போர்வீரர்) வாழும் கூற்றங்கள் / நாடுகள் மிழலை கூற்றம் என வழங்கியது எனவும் தெளிகின்றது
பெருமிழலை எனும் ஊர் பாண்டிய தேசத்தில் இருந்த மிழலை நாட்டில் உண்டு எனவும், மிழலைநாடு புதுக்கோட்டைச் சீமையில் (அதன் தெற்கு) உள்ளதென்பதே ஆராய்ச்சியிற் கண்டது எனவும், புறப்பாட்டில் சொல்லியிருக்கும்படி மிழலைக் கூற்றம் கடற்கரையோரமாக இருக்க வேண்டுமென்பதே என்றும் அறிஞர்கள் கருத்து. அதுமட்டும் அல்லாமல் மிழலைக் கூற்றம் கீழ்க் கூற்று - நடுவிற் கூற்று என்ற உட்பிரிவுகளைக் கொண்டதென்று திருப்புவணக் கல்வெட்டினால் அறிகின்றோம்; கீழ்க்கூற்று என்றமையால் மேற்பகுதி ஒன்றிருத்தல் கூடும்; களக்கூற்று என்றதொரு பகுதியை சுத்த மல்லிக் கல்வெட்டுக் குறிக்கின்றது. 

இத்தனை ஆதாரங்கள் இருந்தும், சிலர் நடுவிற் கூற்றம் என்றால், நடுநாடு மட்டுமே என்றும் கூறுவார். நடுவீர் கூற்றம் என்றால், ஒரு நாட்டின் நடுப்பாகம் மட்டும் அல்ல. 2 பெரும் தேசங்களுக்கும் எல்லையான நடுவான நாடு என்பதே. சோழ - தொண்டை தேசங்களுக்கு மத்தியில் நடுவிற் கூற்றம் / நடுநாடு சோழனுக்கு ஆதரவாய் இருந்தது போல், சோழ - பாண்டிய எல்லையில் கார்காத்த வெள்ளாளர் கோட்டையாக இருந்த நடுவிற் கூற்றம் அதன் சுற்றமும் சோழனுக்கும் சரி பாண்டியனுக்கும் சரி நட்பாகவே இருந்தன. எல்லையாகவும் இருந்தது. இந்த நடுநாடுகளில் போர் வீரர்களுக்கு (மழவர்) என்றுமே வேலை இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை

பாண்டி நாட்டு மிழலைக் கூற்றம்: 

புத்தமித்திரர் - கார்காத்தார்:
இந்த சரித்திர புகழ்மிக்க பொன்பற்றியில்தான் வீரசோழியம் என்ற சோழ தேசத்து தமிழுக்கு இலக்கணம் எழுதிய புத்தமித்திரனார் பிறந்தார். புத்தமித்திரனார் வெள்ளாளர் என்பதால், இவரை சமணர் என்று கருதுவோரும் உண்டு. அது தவறாகும். புத்தமித்திரனார் பௌத்தர்.
மேலும் கார்காத்தாரில் உழுதுண்ணும் குடியை சேர்ந்த சிலர் சோழ தேசத்தில் இருந்து பௌத்தத்தால், கார்காத்தார் சாதியுடன் களப்பிரர் காலத்தில் ஐக்கியமாகினர் என்பதாலும், சோழ தேசத்தில் சிறந்து விளங்கிய பௌத்தத்திற்கு மூல காரணம் சோழிய வெள்ளாளர்கள் என்பதாலும், புத்தமித்திரர் சோழியர் என்ற கருத்து தொண்டை நாட்டில் நிலவி வந்தது. இதன் காரணமாக காஞ்சீபுரத்தில் கந்தபுராணத்தை அரங்கேற்றுங்கால், அப்புராணத்தின் முதற்பாட்டு முதற்சீரில் 'திகடசக்கர' என வரும் சொற்றொடரில், 'திகழ் + தசக்கர' என்பது 'திகட சக்கர' என்று ழவ்வும் தவ்வும் டவ்வானதற்கு இலக்கணவிதி காட்டும்படி சபையோர் கேட்க, அதற்கு ஆசிரியர் விடை கூறத் தெரியாமல் திகைக்க, சிவபிரானே சோழிய வேளாளனாய் வந்து வீர சோழியத்தினின்று இலக்கணவிதி காட்டினார் என்பது கதை. இது தமிழக அரசின் இணையக்கல்வி தளத்தில் வீரசோழியம் நூலின் உரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

புத்தமித்திரனார் பிறந்த பொன்பற்றி ராமநாதபுரம் அருகே இருந்தது என Ancient India: Collected Essays on the Literary and Political History of Southern India எனும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்த பொன்பற்றி எனும் ஊர் சாலியூர் எனவும், நெல்லின் ஊர் எனவும் மதுரைக்காஞ்சியில் சங்ககாலத்தில் வழங்கியது என குறிக்கப்பட்டுள்ளது. இது சங்ககாலத்திலேயே வெள்ளாளர் கோட்டை என இதனை விடவும் ஆதாரம் வேண்டுமா? நெல்லின் ஊர் என்றால் என்ன என்று மதுரைக்காஞ்சியில் தேடுங்கள்.  ஆனால் இந்த சாலியூர் பெரிப்ளஸ் கண்ட நெல்சிந்தா ஆன நெல்லின் ஊர் அல்ல. தலாமி குறிப்பிட்ட சாலியூர்தான் இது. இதற்கு ஊணூர் என்ற பெயரும் உண்டு. இந்த உண்மை தெரியாத சிலர் இதன் அருகே உள்ள  கோடிக்கரை தான் ஊணூர் என்று பரப்புரை செய்தும் வருகிறார்கள். கோடிக்கரை வேதாரண்யம் அருகே, கடல் நீரால் பாதிக்கப்பட்ட ஊர். இங்கே நெல் விளைந்தது என்று எப்படுஇத்தான் சொல்கிறார்களோ!!!

இந்த செய்தியையும், 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை பொன்பற்றி அருகே உள்ள மணமேல்குடியில் கிடைத்ததை (map ஐ பார்க்க) இந்து நாளிதழ் பதிவுசெய்துள்ளதை பார்க்க

பொன்பற்றி மழவர் (கார்காத்தார்) அதியரே:
எல்லாம் சரி, ஆனால் மழவர் ஒரு இனக்குழு அல்லவே. அதுவும் இந்த பாண்டி மழவ வெள்ளாளன் வேங்கடகிரிக்கு அதிபதி என்றும் வருதே. பின்னர் எப்புடி பாண்டி மழவன் அதியர் குடி என்று சொல்லுறீங்க என்று கேட்பீரானால் அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்களை விட்டுச்சென்றுள்ளனர். மேலே படியுங்கள்.

கல்வெட்டுகள்:
1) பொன்பற்றி உடையான் அரையன் சேந்தன் என்கிற ராஜராஜ அதிகைமான் - முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு:
மிழலை கூற்றத்து பொன்பற்றி (அசல் பொன்பற்றியேதான்) ஊரை சேர்ந்த ராஜராஜ அதிகைமான் என்ற பொன்பற்றி உடையான் அரையன் சேந்தன் பற்றி 3 கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
முதல் கல்வெட்டு:
Damaged. Records a sale of land to Araiyan Sendan alias Rajendra-chola Adiyaman of Ponparri in Tirumilalaik-kurram for a garden to supply garlands of specified flowers to the god.
(A. R. No. 137 of 1947-48) 

இரண்டாம் கல்வெட்டு:
Registers a sale of tax-free devadana land in Vilattur-nadu in Keralantaka-valanadu to Ponparri-Udaiyan Araiyan Senan alias Rajendrachola Adiyaman of Tirumilalaikkurram in Rajendrasola-valanadu in Rajarajap-Pandinadu by the executives of the temple on the orders of Vira Vichchadira-Muvendavelar the Srikaryam officer of the temple, stipulating that the endowed land be named Tirumallinadi-vilagam and a specified quantity of a paddy measured to the temple. Dated in the 20th year of the king’s reign.
(A. R. No. 118 of 1947-48)

மூன்றாம் கல்வெட்டு:
Begins with the prasasti Pugal nadu. Records an assignment of land by sale by the temple executives to Tirunilakantan Kalappalan Alagiya . . . . . Murvendavelar of Urrukkattuk-kottam in Jayangondasola-mandalam for payment of specified quantity of paddy to the temple. Refers to the garden land of Ponparri Udaiyan alias Rajendrachola Adigaimanar. The record is dated in the 45th regnal year of the king.
(A. R. No. 111 of 1947-48)

2) பொன்பற்றி உடையான் குன்றன் சீருடையான் - வெள்ளாளன் - இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டு:
செங்குன்ற நாடு (செங்கற்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் பகுதிகள்) களத்தூர் கூற்றத்தின் ஒரு பகுதி. இது நடுவிற் கூற்றம் எனப்பட்ட நடுநாட்டுக்கு வடக்கே உள்ளது. இங்கே வேலைவெட்டி என்ற ஊரில் பொன்பற்றி உடையான் குன்றன் சீருடையான் என்ற வெள்ளாளன் இருந்துள்ளான் என திருக்கோவலூர் தாலுக்காவில் உள்ள ஜம்பையில் இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டு கிடைக்கின்றது.
"---for having killed by accident a certain Ponparri-udaiyan Kunran sirudaiyan, a vellala resident of Valaivetti in their nadu (Senkurnra-nadu). The arrow shot by him at an animal probably in a hunt, is said to have missed its aim and pierced this Sirudaiyan instead."
(A. R. No. 67 of 1906)
இந்த பொன்பற்றி உடையார் என்ற கார்காத்த வெள்ளாளர் குடி நடுநாட்டில் இருந்தது தெரிகின்றதுபோல, திருப்பதியிலும் இருந்தனர்

குருகுலராய கோத்திரம்: 
கார்காத்தார் கொங்கு வெள்ளாளர்களை (கவுண்டர் சாதி) போலவே கூட்ட / கோத்திர முறையை பின்பற்றுபவர்கள் ஆவார்கள். இவர்களில் கொங்குடையான், பனையுடையான், குருகுலராயன், மழவராயன் போன்ற கோத்திரங்கள் பொன்ம்றி மழவர்களின் கூட்டங்கள் ஆகும்.
கார்காத்தார் கோத்திரத்தில் குருகுலராய கோத்திரம்: 
கல்வெட்டில் திருச்சிற்றம்பலமுடையான் என்கிற குருகுலராஜன், மிழலை கூற்றத்து பொன்பற்றி ஊரன் என்று வருகின்றது 

இதேபோல தொண்டைமண்டலத்து காஞ்சியிலும் குருகுலராய கோத்திரத்தார் கல்வெட்டு கிடைக்கின்றது

ஈழம் சென்ற குருகுலத்தரையன் குடும்பம்:
குருகுலத்தரையன் குடும்பம் ஒன்று ஈழம் சென்று கரையார் சமூகத்திடம் கலந்து பல்கிப்பெருகியது. மட்டக்களப்புக்கு சென்ற கார்காத்தார் கரையார் (மீனவர்) குழுவில் கலந்துவிட்டனர். இந்த கலப்பு கரையார் பிரிவில் குருகுலத்தரையன் குடும்பம், கலிங்கமாகனாலும் சந்திரபானு என்னும் தாய்லாந்து அரசனாலும் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்ட போது தமிழகத்துக்கு விரட்டப்பட்டதை ஒட்டி நடந்தது. இந்த கலப்பு குடும்பங்கள் குருகுலக்கரையார் என்று இன்று வழங்கப்படுகிறார்கள். இதில் யாழ்ப்பாணம் சென்றவர்களும் உண்டு. இந்த குருகுலக்கரையார் மரபில் வந்தவர் தான் தமிழீழ போராளி பிரபாகரன்.

இந்த குருக்குலராய கோத்திரம் கரையர் சாதி பெண்களோடு கலந்து, குருகுலகரையார் என்ற பிரிவு உண்டானபோதும், ஒடுக்கபட்டபோதும், அதில் இருந்து மீண்டும் எழுத்து முதலி பட்டமும் பெற்றனர்.

இந்த சம்பவம் என்னை மலையாள கவண்டர் சாதியினை நினைவு படுத்துகின்றது. காஞ்சி முதல் நடுநாடு பூராவும் ஆண்டு ஆதிக்கம் செலுத்திய கவுண்டர்கள் (காராளர் / வெள்ளாளர்) வடுகர் வருகையால், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, கொல்லி மலை, சேரராயன் மலை (சேர்வராயன்), விச்சி மலை (பச்சை மலை), கல்வராயன் மலை என அங்கு வாழ்ந்த வேடர், வேட்டுவர், பள்ளர் பெண்களோடு கலந்தபோதும், தங்களது நாட்டார், குடியானவர், காணியாளர் பிரிவை இன்றும் தொடர்ந்தும், தங்கள் மலையில் நாடுகள் பிரித்தும், முன்னர் இருந்த பட்டக்காரர் போக புதிதாய் உருவாக்கிய நாடுகளுக்கு பட்டக்காரர்களை மூவேந்தர் வழிவந்த கூட்டங்கள் நியமித்தும், தங்கள் கூட்டங்களை இன்று பின்பற்றி வருகிறார்கள். இன்று இவர்கள் மலையாள கவுண்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் கண்டராதித்தன் கூட்டம், கடம்பன் கூட்டம் போன்ற அரச குல கூட்டங்கள் இருப்பதை புலவர் ராசு தன் நூலில் பதித்துள்ளார். சோழன்,வாண்டையான் போன்ற கூட்டங்களும் உண்டு. தொண்டை, நடுநாட்டை எல்லாம் ஆண்டார்களா என்று வியக்க வேண்டாம். ஒரு சிறு உதாரணம் , மகத (நடு)நாட்டை ஆண்ட கொங்கர் கோமான் வரபதி ஆட்கொண்டான். மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனம் அரச குலமும், நிலவுடை சமூகமும் மட்டுமாகவே இருக்கும் என்பது நிதர்சனம். காஞ்சியிலிருந்து வந்ததன் நினைவாக, தங்கள் குல தெய்வமான காஞ்சி வரதராஜ பெருமாளை தங்கள் மலைகளில் வைத்து இன்றும் வழிபடுகின்றனர்
உதாரணத்துக்கு பச்சைமலை மலையாள கவுண்டர்களிப்ப்றி கொஞ்சம் கொடுக்கிறேன். பச்சை மலை வன்னாடு, கோம்பை நாடு, தெம்பர நாடு என மூன்று நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் பல கிராமங்களை உள்ளடக்கியிருக்கும். இந்த மூன்று நாடும் பட்டக்காரர் கண்காணிப்பில் வருகிறது. ஒவ்வொரு நாடும் நாட்டார் கண்காணிப்பிலிருக்கும். இந்த நாட்டார் பட்டக்காரருக்கு கட்டுப்பட்டவர் ஆவார். இவருக்கு உதவியாக காரியக்காரர் என ஒருவர் காணப்படுகிறார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊர்க்கவுண்டர் காணப்படுகின்றார். இவர் நாட்டாருக்கு கட்டுப்பட்டவர் ஆவார். கங்காணி மற்றும் மூப்பன் என்னும் பதவியாளர்கள் ஊர்க்கவுண்டருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆவார்.
அவர்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை,

 


புத்தமித்திரர் - பாண்டி மழவன் - மரபு தொடர்பு:
பொன்பற்றி மழவர் அனைவரும் அதியர் குடியே என்று பார்த்தோம். சரி. புத்தமித்திரனார் கார்காத்தார் என்பதினையும் பார்த்தோம். ஆனால் பாண்டி மழவனுக்கும் புத்தமித்திரருக்கும் தொடர்புண்டா என்றால், ஆதாரப்பூர்வமாக, "ஆம்" என்று உரக்க சொல்லலாம்.
பொன்பற்றுயூர் அரசர் புத்தமித்திரனார் 1060-1090 காலகட்டத்தை சேர்ந்தவர். ஈழத்துக்கு சென்ற பாண்டிமழவன் 1240 AD. இது இவர் முடிசூட்டிய ஆரிய சக்கரவர்த்தியின் காலம். இந்த ஆரியன் தான் குலசேகர சிங்கையாரியன்
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268 - 1311) படைத்தலபதி!!!தான் ஆரிய சக்கரவர்த்தி என்றும் இவரைத்தான் பாண்டி மழவன் முடிசூட்டினார் என்றும் கதை எழுதுவார்கள். இந்த புருடாவை உடைக்க சில மூலமான வரலாற்றை தெரிந்திருக்க வேண்டும். கோடிட்ட பகுதியை படித்தால், பின் வரும் செய்தி உங்களுக்கு நன்கு புரியும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பான அரியணையில் அமர்ந்த முதல்? ஆரியச்சக்கரவர்த்தி குலசேகர சிங்கையாரியன் காலம் ஆதாரப்பூர்வமாக (1240 - 1256). 
இதனை அவர்கள் பரம்பரை இணையதளத்திலேயே சொல்லியுள்ளனர். ஆனால் இந்த தளத்தில் குலசேகரனின் தந்தை செகராசசேகரன் 1215 இல் ஈழத்தை ஆண்டதாக கூறியுள்ளது தவறு. அதை பின்னால் பார்ப்போம்
http://www.jaffnaroyalfamily.org/family_tree1.php

யாழ்ப்பாணம் ஆண்ட கூழங்கை சக்கரவர்த்தி, புராணப்படி கி.மு 101. ஆனால் இதனை ஆய்வாரள்கள் ஒத்துக்கொள்வதில்லை. கி.பி 13ஆம் நூற்றாண்டு என்பதே பொருத்தமானது

கலிங்க மாகன் காலம் 1215 - 1255 வரை. ஆனால் இவர் யாழ்ப்பாணத்தை ஆண்டாரா இல்லையா என்ற ஆராய்ச்சி இப்போ வேண்டாம்

தாமிரலிங்க நாட்டை (தாய்லாந்து & மலாய் நாடு) ஆண்ட சந்திரபானு முடிசூட்டிக்கொண்டது 1230இல். கடல் வழியாக வந்து இலங்கையை 1247இல் / அதற்கு முன்னரோ அடைந்துவிட்டான். இவன் 1247ல் இரண்டாம் பராக்கிரம்மபாகு என்னும் சிங்கள அரசனை எதிர்த்து தோல்வி அடைந்தான். பின் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரிடம் இவனும் இவன் மகன் சாவகன் மைந்தனும் 1258ல் பணிந்து அவனின் கீழ் வடவிலங்கையை ஆண்டனர். அந்த காலத்தில் பாண்டியனுக்கு வரியாக ஆபரணங்களும் யானைகளும் அனுப்பப்பட்டன. இதுவும் கல்வெட்டில் & சூழவம்சத்தில் பதிவானதே

இலங்கையின் செல்வ வளத்தை அறிந்த தாமிரலிங்கத்தினர் அதை அடைய எண்ணி தமக்கு வரம் கொடுத்த பாண்டியப் பேரரசையே எதிர்த்து போர்த்தொடுத்தனர்

1262 - 1264 காலகட்டத்தில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் தம்பி இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஈழ நாட்டில் போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவனுக்கு முடிசூட்டுவித்தான். இது பாண்டியன் கல்வெட்டு செய்தி. கொல்லப்பட்ட ஈழ மன்னன் சந்திரபானு. அதை திரிகோணமலையில் பொறித்தும் வைத்தான். அதனால் சாவகன் தன் சேனையுடன் பின்வாங்கி மீண்டும் பாண்டியப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தான். The Journal of the Siam Society, 1976, Volume 64. pp.305

சாவகன் மைந்தன் யாழ்ப்பணத்தை ஆண்டது 1263 வரை.

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1284 இல் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். இது அனைத்தும் சூளவம்சம், கல்வெட்டுகளில் உள்ளவை.

இப்பொழுது, குலசேகர சிங்கையாரியன் இறந்தது 1283இல் ஆதாரப்பூர்வமாக. ஆனால் முடிசூட்டிக்கொண்டதுதான் குழப்பமான காலம். 1263இல் சாவகன் மைந்தன் வீழ்த்தபட்டான். அதன்பின் என்ன ஆனான் தெரியவில்லை. 1270களில் தன் படைவலிமையை அதிகரித்து மீண்டும் பாண்டியர் சேனையுடன் போர் புரிந்து பாண்டியப் பேரரசனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனால் தோற்கடிக்கப்பட்டான் என்று de Silva, A History of Sri Lanka, p.91-92 சொல்கிறது. எது எப்படியோ யாழில் 1263இல் குலசேகர சிங்கையாரியன் ஆட்சி துவங்கியது.

சூளவம்சம் 5 பாண்டியர்கள் ஒரு ஆரிய சக்கரவர்த்தியின் கீழ் ஒன்று சேர்ந்து ஈழத்து அரசர் இருவரில் ஒருவரை கொன்று இன்னொருவரை அமர்த்தியது என்றுதான் வரும். பாண்டியன் கல்வெட்டும் அதுவே. பஞ்சபாண்டியர் என்று பாண்டியனை குறிக்கும் பதத்தைத்தான் 5 பாண்டியர் என்று சூளவம்சம் சொல்லியுள்ளது. இது ஒரே பாண்டிய மன்னன்தான். 1284இல்தான் பாண்டியன் ஆரிய சக்கரவர்த்தி உதவியுடன் சிங்களத்தின் மீது போர் தொடுக்கிறான். அப்படியானால், 1240இல் யாழ்ப்பான மன்னனாக முடிசூட்டிக்கொண்ட குலசேகர சிங்கையாரியன் யார்??? ஆக, ஆரிய சக்கரவர்த்தி முதலில் பாண்டியனின் தளபதியே அல்ல. அதற்கான கல்வெட்டும் எங்கும் இல்லை. இருப்பது போல் போலியாக எழுதுகிறார்கள் தவிர தளபதி என்று எங்குமே இல்லை. இல்லை. இல்லை. ஆனால் அவர்கள் பூர்வீகம் சக்கரவர்த்தி நல்லூர்தான்.  புகழேந்திப் புலவர் இலங்கை சென்று இந்த ஆரியசேகரனைப் பார்த்து பாடி பரிசில் பெற்றதாக தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. இந்த புகழேந்திப் புலவர் அம்மானைப் பாடல்களைப் பாடிய புகழேந்திப் புலவர் (ஒட்டக்கூத்தர் காலத்தவர் வேறு). இவர் இயற்பெயர் சாருவபெளமன் புகழேந்தி எனக் கருதப்படுகிறது. இவர் கி. பி. 1422-62 ஆண்டு ஆண்ட தென்காசி பராக்கிரம பாண்டியனைப் பாடியவர் என்று அதே நாவலர் சரிதை சொல்கிறது. ஆரிய சக்கரவர்த்தி குலத்தில் உதித்த ஒருவரே செகராசராச மாலை என்ற வைத்திய நூல் இயற்றியுள்ளார் (6ஆம் செகராசசேகரனை - 12ஆம் ஆரிய சக்கரவர்த்தி காலம்). அந்த நூல் கூறுவதோ, ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த ஆரிய வம்ச வேதியர் குடியில் 512 பேரில் ஒருவரை பாண்டி மழவன் அழைத்து வந்தான் என்றுதான் வரும். இதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.

1090 இல் இருந்து 1240 வரை 6 தலைமுறை வித்தியாசம்தான். ஆக பொன்பற்றி மன்னர் புத்தமித்திரரின் மரபினன்தான் பாண்டி மழவனின் தந்தை செல்வராசனாக இருக்க வேண்டும். இதற்கு ஆதாரங்கள் உண்டு.

பின்குறிப்பு: ஆதாரப்பூர்வமாக கலிங்க மாகன் காலமும், விஜய கூழங்கை காலமும் ஒன்றே. ஆனால் கூழங்கை சக்கரவர்த்தி கொங்கதேசத்து பாசூர் மடத்தில் தன் குலகுருவான சந்திரசேகர தீக்ஷதர் குமாரர் ராமலிங்க தீக்ஷதரை அழைத்து இலங்கைக்கு கூட்டிச்சென்று யாழ்ப்பாண பாஞ்சாங்கத்தை உருவாக்குகிறார் என்பது வரலாறு. கூழங்கை சக்கரவர்த்தி வர்ணாசிரமம் கடைபிடிக்காதவர். தமிழர். இது அனைவரும் அறிந்ததே. கலிங்க மாகன், மேலைக் கங்கர் பரம்பரையில் இருந்து பிரிந்து கலிங்கத்தை ஆண்ட கீழைக்கங்க வம்சம். அடிப்படையில் கங்கா குலம். கொங்கரே. வர்ணாசிரமத்தை கடைபிடித்தவர். ஆனால் இதனையெல்லாம் வைத்து காலிங்க மாகன் = கூழங்கை என்பது முட்டாள்தனம். பாண்டி மழவன் முடிசூட்டிய குலசேகர சிங்கையாரியனின் (1240 - 1256) தந்தைதான் கூழங்கை = கலிங்க மாகன் என்பது அடிமுட்டாள்தனம். மேலும் ஆரிய சக்கரவர்த்திகளுக்கு பெண் கொடுத்து பெண் எடுப்பது கலிங்க மாகனின் பரம்பரையான மடைப்பள்ளி வெள்ளாளர் என்பதால், நிச்சயமாக ஆரிய சக்கரவர்த்திகள் காலிங்க மாகன் பரம்பரை அல்ல.


ஆரிய சக்கரவர்த்திகள்: 
ஆரிய சக்கரவர்த்திகள் நீயா நானா என்று பல சாதிகளும் இனி இணையத்திலும் கிறுக்கலாம். ஆதலால் செகராசசேகரமாலை யில் ஆரிய சக்கரவர்த்திகள் யாரென்று குறிப்புகள் உண்டு. அதனை பார்க்கலாம்.
செகராசசேகர மாலை:
ஆரியர் கோனான செகராசசேகர மன்னன், ஆணைப்படி இச்சோதிட நூலை அம்மன்னன் பெயரால் இராச பரம்பரையினனான இராமேசன் மகன் சோமன் எனும் வேதியன் இயற்றினான் என்று தெரிகின்றது. இவ்வாசிரியர் பெயர் சோமசன்மா என வழங்கும்.
நூலெழுந்த காலம் செகராச சேகரனின் (6ஆம் செகராசசேகரன் )ஆட்சிக் காலமாகிய 1380 - 1414 ஆகும்.
என்னடா இது! அரசன் மரபு வேதியன் என்று வருதே என்று வியக்கவேண்டாம். அரசனே வேதியன் தான்.


ஆம். செகராசசேகரமாலை இயற்றிய சோமசன்மா ஆரிய சக்கரவர்த்திகள் கிளை என்றும் வேதியன் என்றும் படித்ததீர்கள். ஆனால் அதே நூலில் சிறப்பு பாவாயிரத்தில் பாசுபதர்கள் ஐநூற்றுப்பன்னிருவர் (512) தெற்கு வந்தது விளக்கியிருக்கும். அதுமட்டுமல்லாது அந்த 512 வேதியரில் 3 பேரை ராமனே தேர்வு செய்து கோவில் அதிகாரத்தை வழங்கினான் எனவும், சுருதி ஆரிய சக்கரவர்த்தி என பட்டம் கொடுத்து, சங்கு சின்னத்தையும், நந்தி சின்னத்தையும் கொடுத்தான் எனவும் விளக்கியிருக்கும். சுருதி என்றால் வேதம்.
இதே கருத்தை பின்னாளில் பலபட்டடை சொக்கநாத புலவர் தேவி உலாவில் பாடுகையில்அந்த 512 வேதியரையும் ஆரியர் என்றே விளக்கியிருப்பார்.
இவற்றை ராஜநாயகம் தன் நூலில் குறிபிட்டுள்ளார்.
சேதுபதி, சேது காவலன் என்ற பட்டமே ராமநாதபுரம் சேதுபதிகளுக்கு உரியது அல்ல என்றும், ராமேஸ்வரம் 512 ஆரியர் குடிகளிடம் இருந்து ஆரிய சக்கரவர்த்திகளிடம் சென்று பின்னர் ராமநாதபுரம் சேது மன்னர்கள் அதனை எடுத்துக்கொண்டனர் என்றும் இந்த நூலில் எழுதியுள்ளனர். இதனை சொல்லும் கல்வெட்டை அந்த வேதியர்களுக்கும், சேதுபதிகளுக்கும் 1866 இல் நடந்த வாக்குவாதத்தில் அழிக்கப்பட்டது என்றும் Tamil culture in Ceylon: a general introduction என்ற நூலில் பதித்துள்ளனர்.
"The title Sethupati thus passed from the hands of the Jaffna king to the Raja of Ramnad. Reminiscent of the intimate ties that subsisted over long ages between Jaffna and Rameswaram,2 are these observations of Rasanayagam : " It would appear that a Pararaja Sekaran was reigning at Jaffna in 1414 A.D., for there were inscriptions on the base of the chief shrine of Rameswaram which recorded that the principle shrines there were built by Pararaja Sekaran in Saka 1336. The stones were hewn at Trincomalee, numbered on the spot ready to be put together and then transported to Rameswaram. Most of these inscriptions were either destroyed or removed and forged ones inserted during a suit between the priests and the Raja of Ramnad about 1866 A.D”

ஆனால் இவை அரைகுறை உண்மைகளாகவே இருக்க முடியும். ஏனென்றால், கீழை கங்கரான சோழகங்கர் பரம்பரைக்கும், ஆரிய சக்கரவர்த்திகளுக்கும், சேதுபதிகளுக்கும் தொடர்பு உள்ளது. காலம் 13ஆம் நூற்றாண்டுக்கும் 17ஆம் நூற்றாண்டுக்கும் நெடும் தொலைவே எனினும், அவர்கள் சூடிய பட்டங்களும், ஆற்றிய பணிகளும் ஐயத்தை ஏற்படுத்தவே செய்கின்றது. கலிங்க மாகனின் பங்காளியாக பாண்டியநாட்டில் அருப்புகோட்டை அருகே இருந்த திருவாலவாய் உடையான் என்ற சோழகங்கர் பரம்பரை தான் குளக்கோட்டன் என்பது நாம் அறிந்தது. ஆனால் இந்த குளக்கோட்டனுக்கும் சேதுபதிகளுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. கங்கன் வெள்ளாளன், சேதுபதிகள் மறவர் ஆன போதிலும், இந்த தொடர்பை விளங்க காலம் வழிவகுக்கும் என நம்புகிறேன்.
தேவர் தளம் வெளியிட்ட தங்காது ஆய்வு:


இராமேசுவரம் கோவிலை சிங்கை அரசர்கள் கட்டியதாக 1866ஆண்டு வரை கோவிலில் கல்வெட்டு காணப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோடிட்ட பாகம் முடிந்தது. மேலே படிங்க

புத்தமித்திரர் பொன்பற்றி காவலர் என்று வீரசோழியத்திலேயே குறிக்கப்படுகின்றார்.

பொன்பற்றி காவலர் புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் உரை எழுதிய பெருந்தேவனாரை ஆதரித்த சேந்தன் என்பவரும் பொன்பற்றி காவலன் என்று போற்றப்பட்டுள்ளார். 
சேந்தன் பொன்பற்றி காவலன்
http://tamilvu.org/slet/l0G00/l0G00nor.jsp?page_no=116&book_id=14



பாண்டி மழவனும் பொன்பற்றி ஊரை காத்தவன் என்று கைலாயமாலையில் போற்றப்படுகின்றான்

சரி. ஊரையும் போரையும் சாதியையும் வைத்து எப்படி ஒரே பரம்பரை என்று முடிவு பண்ண முடியும் என்று கேட்கலாம். பொன்பற்றியூர் அரச மரபில் வந்த பாண்டி மழவன் பரம்பரையில்தான் ஈழத்தை ஆண்ட அரசகேசரி என்ற மன்னன் பிறந்தான். இவர் ஆரிய சக்கரவர்த்தியின் பெண்ணை மணமுடித்த மருமகன் ஆவார். மேலே படியுங்கள்

ஈழத்தை ஆண்ட கார்காத்த பாண்டிமழவன் வம்ஷம்:
அரசகேசரி:
அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார். பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான். எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.

இவர் யாழ்ப்பாணத்திலிருந்த அரசோச்சிய ஆரியச்சக்கரவர்த்திகள் குலத்தவனென யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில்வாகனப்புலவரும் சுவாமி ஞானப்பிரகாசரும் கூறுவர். கி.பி 1591 முதல் 1616 வரை யாழ்ப்பாணத்தில் அரசாண்ட எதிர்மன்னசிங்கன் என்ற எட்டாம் பரராசசேகரனின் சகோதரன் என்று போர்த்துக்கேய சரித்திர ஆசிரியர் குவேறோசும், அம் மன்னனது மருமகன் என்று யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியரும் அரசகேசரியை விவரிப்பர்.
நிற்க. ஆரிய சக்கரவர்த்திகள் குலத்தவன் என்றும், அவர்கள் மருமகன் என்றும் ஒரே நூல் ஏன் சொல்ல வேண்டும்? இதனை விளக்க, ஆரிய சக்கரவர்த்திகளும் ------ என்று ஆதாரங்களை கொடுத்தாலும், அதியர் தலைப்புக்கு இது பொருந்தாத தலைப்பு என்பதால், இதனை நாம் இங்கு விவாதிக்க வேண்டாம். 


தமிழில் ரகுவம்சம் இயற்றிய அரசகேசரியும் இவரே

அரசகேசரியின் பெயரால் ஈழத்தில் நீர்வேலி கிராமத்தில் அரசகேசரி பிக்கையார் கோவில் அமைந்துள்ளது

பின்குறிப்பு: 

அரசகேசரி என்றால், அரசர்களில் சிங்கம் போன்றவன் என்று பொருள். தஞ்சை சோழர்கள் & கொங்கு சோழரும் ராஜகேசரி, பரகேசரி என்று தம் பெயருக்கு பின்னல் போட்டுக்கொண்ட பட்டத்தின் விளக்கம் இதுதான். ராஜகேசரி என்றால் அரசர்களில் சிங்கம் போன்றவன். பரகேசரி என்றால், அயல் நாட்டவர்களுக்கு சிங்கம் போன்றவன் என்பதாகும்.


ஆறுமுக நாவலர் - பாண்டி மழவன் வம்சாவழி:
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாளர் மரபில், பாண்டி மழவர் குடியில், சலிவாகன சகாப்தம் 1745 இற்கு சரியான கி.பி 1822ம் வருடம் மார்கழி மாதத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமியார். இவரது ஆறாவது குழந்தையாக பிறந்தவர்

அதியர் குடியினர் கார்காத்தரில் ஐக்கியமாகியுள்ளனர் என்பதை இதைவிட சுருக்கமாக விளக்கமுடியாது.

4)  தென்கரை வெள்ளாளர் / செந்தலை வெள்ளாளர் - கொங்கு வெள்ளாளர் (பெரும்பான்மையினர்):


'
'
'

'

6) வடகரை வெள்ளாளர் / நரம்புகட்டி கவுண்டர்:

சங்ககாலத்தில் மழவர் என்ற பதம் போரே தொழிலாக ஏறுக்கொள்ளும் வீரர்கள் என்று பார்த்தோம். ஆனால் அந்த மழவர் என்ற பதம், கொடுமுடி, கொல்லிமலை போன்ற இடங்களில் இருந்த சில வேட்டுவர்களுக்கும் வழங்கியது என்றும் தெளிவு (பின்னாளில் கரூர் பகுதிகளில் குடியேறி கலந்த வடுகர்களை அல்ல).
ஆனால் ,
அதியர் என்ற இனம் யார்?
அந்த சேர வம்ஸ மூலத்தை கொண்ட அதியர் யார்?
மழவர் என்றாலே வடகரை வெள்ளாளர் மட்டுமாகத்தான் இருக்குமோ என்று ஆய்வாளர்கள் வியக்கும் அளவிற்கு வரலாறையும், அதற்கான ஆவணங்களையும் பெற்றிருக்கும் இந்த வடகரை வெள்ளாளர் யார்?
என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் முன்னர், ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். அதியரின் இனம் இன்று லட்சக்கணக்கில் செங்குந்தரிலும், கார்காத்தாரிடமும் ஒடுங்கியிருக்கலாம்நரம்புகட்டி கவுண்டர் என்றும், நார்முடி கட்டியர் என்றும், நார்முடி வேளாளர் என்றும், நரம்பர் என்றும் கல்வெட்டுகளிலும், சாசனங்களிலும் அறியப்படுகிறார்கள். இவர்களுக்கும் அதியருக்கும் உள்ள நெருக்கத்தை விளக்க ஒரு நூலாகவே தொகுக்கவேண்டிவரும்... அதியர் என்ற இனமே வடகரையாளர் தான் என்று முதலில் கருதினேன் ... ஆனால் குறுந்தொகை 393 இல் பாண்டியனுக்கு அதியர் துணைநின்றதற்கு கொங்கர் அதியரை கொன்று வென்ற வரலாறு தெரிந்தபின் கருத்து மாறியது...
இவர்களைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்...

அதியரின் குடிகள் & அதியர் கலப்பில்லா மழவ குடிகள் ஐக்கியமான வேட்டுவர், முத்தரையர், கள்ளர் போன்றோரை ஆதாரங்களுடன் பார்க்கும் முன்னர், இப்பொழுது அவசரத்தின் காரணமாக ஈழத்து வன்னியர் யார் என்ற உண்மையை உரைக்கின்றேன்.

 

ஈழத்து வன்னியர் - உடையும் உண்மை

ஈழத்தை பொருத்தவரை வன்னியர் என்றால் அது பெரும்பாலும் வெள்ளாளரும், முற்குகரும் (மறவர்) தான். ஈழத்தை பொருத்தவரை படையாச்சிகள் வன்னியர் அல்ல. வன்னிமைகளில் முற்குக வன்னிமை (மறவர்) & வேளாண் வன்னிமை (வெள்ளாளர்) உண்டு. இதில் மறவரில் ஒரு பிரிவினர்தான் படையாச்சி (படையாண்ட குடி). வன்னிய பட்டம் உண்டு. முற்குகரில் இருக்கும் இன்னொரு பிரிவுதான் காலிங்கராசன் குடி. இவர்கள் மதுரையில் இருந்த வந்த வன்னியரில் (மறவர்) ஒருவர். ஆனால் இவர்களுக்கும் தமிழகத்தில், கடலூர், விழுப்புரத்தில் படையாச்சி என்ற பெயரில் உள்ளவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது வெறும் பழைய வரலாறு அல்ல. இன்றும் தொட்டுத்தொடரும் பாராம்பரியம்.

ஈழத்தில் வன்னியர் குடியேற்றம் பல காலகட்டங்களில்  நடைபெற்றது. பல நபர்களால் நடந்தது. அவை,

1) குளக்கோட்டன் காலம் / வாலசிங்க மகாராஜா காலம் (கூழங்கை சக்கரவர்த்தி காலமே)
2) விஜையன் (கூழங்கை சக்கரவர்த்தி???) காலம்
3) கலிங்க மாகன் காலம் (குளக்கோட்டன் காலமே)
4) அமரசேனன் காலம்

குளக்கோட்டன் காலம்:

குளக்கோட்டன் என்பது ஈழத்தில் அவருக்கு கிடைத்த பெயர். அவர் சோழகங்க வம்சத்தவர். அதாவது, கீழைக்கங்கர் பரம்பரைகங்கா குல திலகன். கலிங்க மாகனுக்கு பங்காளி முறை. தன் பங்காளி மாகனுக்கு உதவி புரிய ஈழம் வந்தவர். மட்டகளப்பு, திரிகோணமலையை ஆண்டவர். இவரின் உண்மையான பெயர் நல்ல பெருமான்
குளக்கோட்டன் சோழகங்க வம்சமே என்பது ஸ்ரீ தக்ஷின கைலாச புராணத்தில் நிரூபணமாகியுள்ளது.

இந்த குளக்கோட்டன் குடியேற்றிய வன்னியர்கள் பற்றியும் யாழ்ப்பான வைபவமாலை கூறுகின்றது. இந்த வன்னியர்களுக்கு தலைவனே பூபால வன்னியரை நியமித்ததையும் கூறுகின்றது.

வைபவமாலையில் உள்ளது உள்ளபடி என்னவென்றால், வன்னியர் உழு குடி. இவர்களுக்கு வெள்ளாமை செய்யத்தான் நாடு திருத்தப்பட்டது. இவர்களுக்கு தலையாய பணி என்னவென்றால், கோணேசர் கோவிலில் உள்ள லிங்கத்திற்கு பூஜை செய்வது & தான் எடுக்கும் வெள்ளாமையில் வரும் வருமானத்தை கோவிலுக்கே அளிப்பது. இதுதான். யாழ்ப்பான வைபவமாலையே இதனை கூறும்போது, முதலியார் ராஜநாயகம் ஏன் நம்பாதே வெம்தாதே என்று அடம்பிடிக்கிறார் என்றால், 1831 முதல் சில நாசகார கும்பல், வரலாற்றை திரித்து வருவதால் ஏற்பட்ட குழப்பமும் தாக்கமுமே.


எல்லாம் சரி. ஒரே ஒரு பழைய ஏட்ட வெச்சிட்டு, அதுதான் வரலாறு நு சொல்றியே பொடியா. உன்ன எப்புடி நம்புறது நு கேட்டீங்கனா நான் சொல்வேன், இன்னமும் ஆதாரம் தருகிறேன் என்று :)
இன்னொரு ஏடும் உள்ளது. அதில் எந்த ஊரில் இருந்து, எந்தெந்த சாதியில் இருந்து, யார் யார் குளக்கோட்டானால் கொண்டுவரப்பட்டார்கள் என்ற விபரம் தொடங்கி, அவர்களுக்கு ஒவ்வொரு சாதியிலும் என்னென்ன குடிகள் உண்டு என்றும், எந்தெந்த குடிகளுக்கு எந்தெந்த பணிகள் நியமிக்கப்பட்டன என்றும், எந்தெந்த குடிகளை எங்கெங்கு எந்த ஊரில் குடியமர்த்தினார்கள் என்பது வரையான துல்லியமான விபரங்கள் உண்டு.
இவற்றில் அகம்படி வெள்ளாளர் என்று அழைக்கப்படும் துளுவ வெள்ளாளர் / தொழுவ வெள்ளாளர் குடியமர்த்தப்பட்ட அனைத்து கிராமங்களிலும், இன்றும் அகமுடைய வெள்ளாளர் வன்னியர்கள் என்ற பெயரில் நிறைந்து உள்ளனர்.
குளக்கோட்டன் அழைத்துவந்த இந்த அனைத்து குடிகளிலும் பள்ளி சாதியினரோ, படையாச்சிகளோ இல்லை. ஆனால் உழுகுடிகள் / வெள்ளாளர் (வன்னியர்) வந்துள்ளனர். அவர்களுக்கான 18 குடிபடைகளும் வந்துள்ளனர். அந்த வெள்ளாமை செய்யும் வன்னியர், அகம்படி வெள்ளாளர் எனும் தொழுவ / துளுவ வெள்ளாளர்!!! நாடு பிரித்து நாட்டாமை செய்வது வெள்ளாளர் மரபன்றோ!
சரி 18 குடிபடைகள் வந்திருக்கிறார்கள். இந்த 18 குடிபடைகளில் தானே அகம்படி வெள்ளாளர் வருகின்றனர். இந்த 18 குடிபடைக்கும் தலைவனாய் 7 வன்னியர் இருக்கிறார்களே அவர்கள் தானே முக்கியமானவர்கள். அந்த வன்னியர்கள் வெள்ளாளரா என்றால் ஆம் அவர்களும் வெள்ளாளர் தான். அந்த 7 வன்னியரின் தலைவன் பூபால வன்னியன் பூபால கோத்திரத்தவன்தான். பூபால கோத்திரம் என்றால் கலிங்க வெள்ளாளர் என்று மட்டக்களப்பு மான்மியம் விளக்கும்.

இந்த கலிங்க வெள்ளாளரை மாகோன் வகுத்த வன்னிமையில் முற்குக குடியுள் ஒன்றான மண்முனை உலகப்போடி குடி எனும் வங்க அரச வம்சத்திற்கு மேலும் (கங்க இளவரசி உலகநாச்சிக்கும் வங்கனுக்கும் பிறந்த குடி), பூ-வைஷ்யனுக்கு மேலேயும், குருநாதருக்கு கீழேயும் வைத்து அழகு பார்த்துள்ளான் கலிங்க மாகன் (கங்கன்). தேசம், வன்னிமை பிரித்தல், குரு, அடுத்து கலிங்க வெள்ளாளர், அதன் பின் பூ-வைஷ்யர் என வருவது அந்தணர், அரசர், வணிகர் என்ற முறையில் கலிங்க வெள்ளாளர் அரச குடி என்ற அடுக்கில் அலங்கரிக்கப்பட்டுள்ளது விளங்கும். இதனை பின்னால் பார்க்கலாம்.

சரிகை சன்னாசம் என்று படையாச்சிகள் குறிக்கப்படுகிறார்கள். குருவுக்கு மேலே இவர்கள் குறிக்கப்படுவது ஏன் என்று பின்னால் பார்ப்போம்.

வெள்ளாளர் (வன்னியர்) தலைவனான பூபால வன்னியன் என்ற பெயரே அவரை வெள்ளாளர் என்று காட்டிக்கொடுக்கின்றதே
பூபாலன் என்றால் வெள்ளாளன் என்றும் சுதந்திரமான அரசன் என்றும் நிகண்டுகளே சொல்லுதே

வாலசிங்க மகாராஜா:

முதலில் உக்கிரசிங்கன் பற்றிய புரிதல் முக்கியம். உக்கிரசிங்கன் சாலிவாகன சகர்ப்தம் 717ல் (கி.பி. 795) விஜயராசனின் சகோதரன் பாண்டு வசுவின் மரபினன் எனவும் வடதிசையில் இருந்து வெகு திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சில தலைமுறையாய் இழந்து போன இவ்விலங்கை அரசாட்சியில் அரைவாசி வரைக்கும் பிடித்து கதிரைமலையிலிருந்து அரசாண்டு வந்தான் எனவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். யாழ்ப்பான வை. மாலை தந்திருக்கின்ற பூர்வகால ஆண்டுக் கணக்குகளை பெரும்பான்மை ஒப்புகின்றனவராகிய இராச நாயக முதலியார் எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் (கி.பி. 795) தொடக்கம் கதிரைமலையில் உக்கிரசிங்கன் இருந்து யாழ்ப்பாண அரசியற்றினான் என சொல்லுகிறார். இது மிக சரியான செய்தியே ஆனாலும் காலம் தவறு. முன்னர் நாம் பார்த்த குளக்கோட்டன் வரலாற்று கதாப்பாத்திரமே. கல்வெட்டுகள் கூட உள்ளனவே. கலிங்க மாகனும் அப்படியே. ஆனால் அவர்கள் காலமே கி.மு க்கு தவறாக இலக்கியங்களில் குறிக்கப்படும்பொழுது, இந்த காலமும் தவறாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
வாலசிங்கன் பிறப்புப் பற்றியும், கைலாயமாலை விரிவாகச் சொல்கிறது. இவ்வாலசிங்கன்தான் செங்கடக நகர்மன்னன். இவன் உக்கிரசிங்கனின் மகன். வாலசிங்க மகாராஜா தான் அருப்புகோட்டையில் பாண்டியனுக்கு அதிகாரியாக இருந்த கீழைக்கங்க மன்னன் கிளை வம்சாவழியான திருவாலவாய் உடையான் சோழகங்கதேவனின் மகனான நல்ல பெருமாள் சோழகங்க தேவன் என்ற குளக்கோட்டன். சுருக்கமாக, வாலசிங்கன்தான் குளக்கோட்டன். குளக்கோட்டன் காலத்தில் நடந்த வன்னியர் குடியேற்றம் பற்றி, பிற இலக்கியங்களில் இருந்து தரவுகளை பார்ப்போம்.

ஆக, முதலில் வந்திறங்கிய 60 வன்னியரும் மதுராபுரியில் இருந்துதான் வருகின்றனர். இந்த 60 வன்னியர் வெள்ளாளரா இல்லை மறவரா என்பதுதான் இப்பொழுது million dollar கேள்வி. அவர்கள் யார் என பின்னால் விவாதிப்போம்.

கோனேசர் கல்வெட்டுகள் இன்னமும் நிறைய வரலாற்றை தருகின்றன. அது என்னவெனில், கங்கா குல திலகன் குளக்கோட்டன் தான் மருங்கூரில் இருந்து முதலில் 30 வன்னியரை திரிக்கொனேசருக்கு தொழும்பு செய்ய அழைத்து வந்தார் எனவும், தான் அழைத்து வந்த மருங்கூர் தொழும்பு வன்னியர் பிரச்னையை தீர்க்கவே, மதுராபுரியில் இருந்து தனியுண்ணா பூபால வன்னியனை அழைத்து வந்தார் எனவும் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

தொழும்பு என்பதற்கு அடிமை என்ற பொருள் இருந்தாலும் சேவை , இறைத்தொண்டு போன்ற அர்த்தங்களும் உண்டு. ஆக இந்த மருங்கூர் வன்னியர் என்பார் பள்ளி சாதியினர் அல்ல. துளுவ / தொழுவ வெள்ளாளர்தான்.

இதன் பிறகு காரைகாலில் இருந்து 21 குடிகளையும் தொழும்பு செய்ய அழைத்து வந்தார் குளக்கோட்டன் என்றும் கோநேசர் கல்வெட்டு வாசிக்கின்றது.
ஒவ்வொரு சாதிக்குள்ளும் 4 வர்ணங்கள் உண்டு. அதுபோல துளுவ / தொழுவ வெள்ளாளர் சாதியில் வாணர் / வாணாதிராயர் என்ற அரசர்கள் தோன்றினர். அவர்கள் க்ஷத்ரியர்கள். தங்களில் வைஷ்ய வர்ணம் இருந்ததற்கு தமிழகத்தில் சென்னையிலேயே 2 கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு. அது போல சூத்திரர்களும் இருந்தனர். சூத்திரர் என்றால் அடிமையல்ல. சுதந்திரக்குடியே. அனைத்து சாதிகளிலும் இது உண்டு. "சதுர் வர்ண குலோத்பவன்" என்று வெள்ளாளரை குறிக்கும் கல்வெட்டுகள் "நான்கு வர்ணங்களாய் உதித்தவன்" என்று உரைப்பனவே. புரிதலுக்காக விளக்கினேன்.


விஜையன் காலம்:

விஜையன் குவேனி என்ற யக்ஷியை அரசுக்காக ஏமாற்றி மணந்து துரத்திவிட்டபின்னர் பாண்டியன் மகளை மணந்து, பாண்டிய இளவரசியுடன் 700 கன்னிப்பெண்கள் விசையன் கூட வந்த நண்பர்கள் மணக்க கூட்டி வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாண்டிய இளவரசிக்கு சீதனமாக வந்த வன்னியர் பற்றி யாரும் பேசுவதேயில்லை. ஆனால், இதனைப்பற்றிய குறிப்பு சூளவம்சமோ, மஹாவம்சமோ எதிலும் இல்லை. கூழங்கை சக்கரவர்த்திக்கு விசைய கூழங்கை என்ற பெயர் உள்ளதால், இந்த விசையன் குவேனி - விசையன் அல்ல என்றும், இவன் கூழங்கையனே என்று துணியலாம்

குளக்கோட்டன் காலகட்டம் வைபவமாலையில் கற்பனை கலந்து கொடுக்கப்பட்டுள்ளதால், அந்த காலகட்டம் தவறு. குளக்கோட்டன் காலத்தில் / அதன் பிறகே இது நடப்பதாக வருவதால், அதனை ஆய்வாளர்கள் ஏற்கின்றனர். காலத்தை மறுக்கின்றனர். அதனையே நாமும் ஏற்பது நலம்
உழுதுண்ணும் குடி வெள்ளாளர்களை (வீழ்குடி) சீதனமாக, அவர்கள் அனுமதியுடனே அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் அவர்களுக்கு குடிபடையாக 18 சாதிகளையும் அனுப்புவதும் அரசனின் தலையாய கடமை. மிக முக்கியமாக, உழுவித்துண்ணும் குடி / நாட்டார் & காணியாளர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள். நாடு பிரித்து அரசாள. ஆக இங்கே வந்தவர்கள் வன்னியர் வெள்ளாளர் தான் என்றே கொண்டாலும், அவர்கள் வந்ததற்கும் சரி, குடிபடைகளுக்கும் சரி, எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இதனை புராணமாக எடுத்துக்கொண்டு கட்டுக்கதை என்று முற்போக்கு தீவிரவாதிகள் போல தூக்கி எறிவது அடிமுட்டாள்தனம். இலங்கை தமிழர் மரபணு & சிங்களர் மரபணு பரிசோதனைகள் உண்மையை உடைத்துவிட்டன. சிங்களரில் 70% தென்னிந்திய தமிழர் தான். ஆக து கதையல்ல , வரலாறு.
Kshatriya, G.K. (1995). "Genetic affinities of Sri Lankan populations". Human Biology (American Association of Anthropological Genetics) 67 (6): 843–66.

சரி. இந்த குடியேற்ற வரலாறை முழுதாக பார்த்துவிடலாம். விஜையன் காலம் என்பது இங்கே விஜைய கூழங்கை சக்கரவர்த்தி காலம் அல்லது விஜைய காலிங்க சக்கரவர்த்தி எனும் கலிங்க மாகன் என்பது தான் சரி. குளக்கோட்டன் காலத்தில் நடக்கிறது என்பதால், அவர்கட்கு சம காலத்தவனான கூழங்கை சக்கரவர்த்தி & கலிங்க மாகன் காலம்தான் இது என்பதும் நிரூபணம். இப்பொழுது நாம் முதலில் வந்திறங்கிய 60 வன்னியர்களை பார்க்க இருக்கிறோம். முன்னர் பின்னர் பார்க்கலாம் என்று ஒதுக்கிய பகுதிதான் இது.
அடங்காப்ப்றில் இந்த 60 வன்னியர்கள்தான் குடியேறுகின்றனர். ஆகவே இதற்கு முன்னர் சிலர் வந்திருந்தாலும் அவர்களும் இதே குடியினர் என்பது தெளிவு. அது மட்டுமின்றி இந்த 60 வன்னியர் குளக்கோட்டனோடு வந்தவர்கள் என்பதும் நிரூபணம். தன் இனத்தானை (காராளனை) நாட்டிலும், அயலாரை சில காரணங்களுக்காக காட்டிலும் குடியேற்றியவன் இந்த குளக்கோட்டன்தான்.

அடங்காப்பதியின் ஆதி குடிகளும் 60 வன்னியரும்:

வையாப்பாடல் கூறும் அடங்காப்பதியின் ஆதி குடிகள் 4 ஐயும் அவர்களை கருவறுத்து மாண்ட 60 வன்னியர்களையும் வையாப்பாடலில் உள்ளது உள்ளபடியே கீழே கொடுக்கின்றேன்
அடங்காப்பதியில் வந்து குடியேறிய வன்னியர்கள், அப்பதியில் வாழ்ந்த பூர்வீக குடிகளின் கொடுங்கோன்மையைச் சகிக்க முடியாதவர்களாகி, அவர்களை அழிக்க எண்ணி மதுரையைச் சார்ந்த இடங்களிலிருந்து மேலும் சில வன்னியர்களை வரவழைத்தனர். இவ்வழைப்பையேற்று வந்த வன்னியர்கள், கறுத்தவராய சிங்கம், தில்லி (தெல்லி). திட வீரசிங்கன், குடைகாத்தான், மடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராச சிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்க சிங்கன் (அங்கசன்) கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன் கேப்பையினார், யாப்பையினார் ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன் இளஞ்சிங்கமாப்பணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தர் ஆகியோராவார்.

அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள்
வன்னியர்கள் இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங் காரணமாகவே அதற்கு அப்பெயரிட்டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனால் வெளிப்படையாகிறது. வன்னியர் வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளி மாநகரிற் சாண்டார் அரசாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில்லிகுலப்பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும், கிழக்கு மூலையில் “இராமருக்குத் தோற்றேயகன்ற ராட்சதர்” ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்ததென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித்தரசாண்டனர் என்பதும் இவற்றாற் புலனாகும்.

அடங்காப்பதி வாழ் ஆதிக் குடிகளை வன்னியர் அடக்கியமை
வையாபாடலின்படி, கணுக்கேணியில் அரசுசெலுத்தி வாழ்ந்த வில்லி குலப் பறையரைத் திடவீரசிங்கனென்ற வன்னியன் போரில் வென்று அப்பகுதிக்கதிபதியானான். சந்திரவன் என்ற சாண்டார் தலைவனை அவன் பதியாகிய முள்ளிமா நகரிலே போர் செய்து வென்று அப்பற்றை ஆண்டான் மெய்த்தேவன் என்ற வன்னியன். தனிக்கல்லிலே வாழ்ந்த வேடர்கள் தலைவராய சகரன், மகரன் என்பவரை வென்று அவர் குலத்தை அழித்து ஆங்கரசு செய்தான் வாகுதேவன் என்ற வன்னியன், இளஞ்சிங்கவாகென்ற வன்னிய வீரன் இராட்சத குலத்தினரைப் போரில் அழித்து, அவர்கள் வாழ்ந்த கிழக்கு மூலை, மேற்கு மூலையாகிய பகுதிகளைப் கைப்பற்றியாண்டான். இவனோ பின்னர் வன்னி நாடு முழுவதற்கும் அதிபதியானான்.

அசுரரால் அழிந்த வன்னியர்
இளஞ்சிங்கவாகு இராட்சதரோடு போர் செய்து வெற்றி கொண்ட போதும், அவர்களை அவனால் முற்றாக அடக்கிவிட முடியாதிருந்தது. அதனால் அவ்வசுரர்களை அடியோடு அழித்து விட வேண்டுமென்று ஐம்பத்துநாலு வன்னியர்கள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்துப் போராடினர். அப்போரிலே அசுரர்கள் பெருஞ் சேதமடைந்து சிதைந்தனரெனினும் அவர்களுக்கெதிராய்ச் சமர்விளைத்த ஐம்பத்து நான்கு வன்னியரும் அப்போரிற் பட்டொழிந்தனர். அதன் பின் எஞ்சியிருந்த ஐந்து வன்னியரும் அடங்காப்பற்றை ஐந்து பற்றாகப் பிரித்தரசாண்டனர். அவ்வேளையில், வன்னியர் ஐவருங் கூடி இளஞ்சிங்கவாகுவை வன்னிநாடு முழுவதற்கு மதிபதியாக்கி, மெய்த்தேவன், நல்லவாகு, இராசசிங்கன் ஆகியோரைத் தந்திரத்தலைவரும் மந்திரிகளுமாக்கி மதுரைக்கு மீண்டு சென்றனர். செல்லும் வழியிற் கடலிலே திமிங்கிலம் கப்பலைக் கவிழ்க்க, ஐவரும் இறந்து பட்டனர். இதையறிந்த அவ் வன்னியர் மனைவியர் தங்கணவரைக் காண ஓடமேறி இலங்கைக்குப் புறப்பட்டனர். வன்னியர் இறந்த செய்தியை அவர் மனைவியர்க்கறிவித்தற் பொருட்டாயனுப்பப்பட்ட தூதுவர் யாழ்ப்பாணத்தில் அவ்வன்னிச்சியர் வந்திறங்கிய துறையில் அவரைச் சந்தித்துத் தாங்கொணர்ந்த செய்தியைத் தெரிவித்தனர். தங்கணவர் இறந்தனரென்;ற செய்தி செவியுற்ற வன்னிச்சியர் செல்வி வாய்க்கால் எனுமிடத்திலே தீமூட்டி அதனிடை வீழ்ந்து உயிர் துறந்தனர். அவ்வாறிறந்த வன்னிச்சியர் பின்னர் நாச்சிமாரென வழிபடப்பட்டனர்.
மதுரையிலிருந்து ஓடமேறி வந்த வன்னிச்சியருள் ஒருத்தி மட்டும் தன் கணவன் கண்டிநகரிலே திசையாக (திசாவ) இருக்கிறானென்றறிந்து அங்கு சென்றாள்.
இவ்வாறு 4 இனங்களை / இனக்குழுக்களை இனப்படுகொலை செய்து இறுதியில் தாமும் (59 பேர்) அழிந்துபட்ட வன்னியருள் ஒருவன் மட்டும் தப்பினான் அல்லவா... அவர்கள் யார் என்றும், இந்த வன்னியரின் மனைவியரான வன்னிநாச்சிமார் யார் என்றும் பின்னர் பார்க்கலாம். அவர்கள் பெரும்பாலும் பாண்டிய நாட்டு மறவர் குடிகள். இதனை பின்னர் பார்ப்போம். அதற்கு முன் எஞ்சிய 1 வன்னியன் (மறவர்) பரம்பரையோ அல்லது அடங்காப்பதி வன்னியை மொத்தமாக கொண்டு அரசனாகி மடிந்த இளஞ்சிங்கவாகு என்ற வன்னியன் (மறவர்) பரம்பரையோ அங்கு வன்னியராக ஆண்டனர். அந்த வன்னியரையும் பின்னாளில் அடக்கி ஒடுக்கி ஆண்ட வெள்ளாளர் வன்னியனார் எனப்பட்டனர். வெள்ளாள வன்னிமைகள் போக மீதம் இருக்கும் வன்னிமைகளிலும் வன்னியனார் எனப்பட்ட குழுவினர் வெள்ளாளர்தான்.

இப்பொழுது பாண்டிய நாட்டு மதுரையில் இருந்து வந்த 60 வன்னியருள் (மறவர் & வெள்ளாளர்) காலிங்கராசனும் இருந்தான் எனவும் அவர்கள் ஆதி குடிகளை கருவறுத்து இறந்தும் போனார்கள் வையாபாடல் கூறியதை கவனித்திருப்பீர்கள். கவனிக்காவிட்டால், மேலே ஒரு பார்வை பார்த்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்.
இதன் பின்னர் குடியேறிய வன்னியர் பற்றி வையாப்பாடலில் இருந்து உள்ளது உள்ளபடி கொடுக்கிறேன்

இந்நூல் கூறும் ஏனைய வன்னியர்
காலிங்கரும் கட்டையரும் கச்சாயிற் குடியேறி வாழ்ந்தனர். தெல்லி என்ற வன்னியன் பழையென்ற ஊர் சென்று வசித்தான். மூக்கையினர் (யாப்பையினார்) கேப்பையினார் ஆகியோர் கரைப்பற்றில் வாழ்ந்தனர். ஊமைச்சி என்ற பெண் கருவாட்டுக்கேணி என்ற இடத்திற் குடியமர்ந்தாள். அங்கசன் (அங்கசிங்கன்) கட்டுக்குளப் பற்றிலமர்ந்தான். சிங்கவாகு திருகோணமலையை யடைந்தான். வெருகல் தம்பலகாமம் ஆயபகுதிக்கு மாமுகன் சென்றான். கொட்டியாரப்பற்றிற் சுபதிட்டன் அரசையாண்டான். மேலும், வையாபாடல், முகமாலையில் மூன்று வன்னியர்கள் வந்திருந்தார்கள் என்று கூறுகிறது. வீரமழவராயன், நீலமழவராயன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்றும், பூபால வன்னிமை, கோபாலன் ஆகியோர் திரியாய். கட்டுக்குளப் பகுதியில் வாழ்ந்தனர் என்றும், வில்லராயன் நல்லுரில் வாழ்ந்தானென்றும் இந்நு}ல் காட்டுகின்றது. மற்றும், செட்டிகுளத்திலே தேவராயன், கொடிதேவன், கந்தவனத்தான் ஆகியோரும், பனங்காமத்திலே துங்கராயனும், துணுக்காயிலே சோதிநாதன். சிங்கவாகு ஆகியோரும் வதிந்தனர்.

மேலே குறிப்பிட்ட காலிங்கர், கட்டையர், தெல்லி, அங்கசிங்கன் ஆகியோர் முன்னர் வந்த 60 வன்னியர் எனவும், அவர்கள் மாண்ட செய்தியையும் வையாபாடல் கூறியதை பார்த்தோம். இதில் அங்கசிங்கன், காலிங்கன், கட்டையன், வில்லராயன் ஆகியோர் வெள்ளாளர் ஆவர்.
இதன் பின்னராக வந்து யாழ்ப்பாணத்தில் அமர்ந்த வீரமழவராயன், நீலமழவராயன் ஆகியோர் பாண்டியமழவன் சார்ந்த கார்காத்த வெள்ளாளர் ஆவர். திரிபாய், கட்டுக்குளம் பகுதிகளில் அமர்ந்த பூபால வன்னிமை, கோபாலன் ஆகியோர் காராளர் (வெள்ளாளர்) ஆவர். கட்டுக்குளம் வன்னிமையே காராருடையது என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவற்றை பின்னால் பார்ப்போம். அதற்கு முன்னர் கலாநிதி பத்மநாபன் தம் நூலில் குறித்த மதுரையை பூர்வீகமாகக்கொண்ட பூபால கோத்திர வன்னியர் (கலிங்க வெள்ளாளர்) பற்றி சிறிது தெளிவு பெறுதல் அவசியம்.
பொதுவாக அனைவருக்கும் எழும் கேள்விதான் இது. பூபால கோத்திர கலிங்க வெள்ளாளர் மதுரைக்கு எப்படி வந்தனர் என்பது. கங்கா குல திலக கீழைக்கங்கர் குடியான சோழகங்கர் செல்வாக்குடன் அரசோச்சிக்கொண்டிருக்கும்போதே சோழகங்கர் கிளைகள் பல தமிழகத்திற்கு வரலாயின. சீயகங்கன், பங்கள நாட்டு கங்கரையர், குளக்கோட்டன் மூதாதையரான அருப்புக்கோட்டை சோழகங்கர் என்பவை சில உதாரணகள். இப்படியாக பாண்டிய நாட்டுக்குள் வந்த கங்க குடியினர் தங்களை பூபால கோத்திரமென்றும் கலிங்க வெள்ளாளர் என்றும் அழைத்துக்கொண்டனர். அவர்களில் இருந்து மலர்ந்தவர்தான் பூபால வன்னியன். இதுபோல கீழைக்கங்க அரசனின் நேரடி வாரிசான காலிங்கராசன் குடி மதுரைக்கு வந்தது ஆச்சர்யமல்ல. 1272-83 காலகட்டத்தில் ஒரு சோழகங்கனும், ஒரு காலிங்கராயனும் பாண்டிய நாட்டிலிருந்து இலங்கையின் மீது படையெடுத்தார்கள் என்றும் சூளவம்சமே சொல்கின்றது. இது காலிங்க குடியும் சரி, சோழகங்க குடியும் சரி பாண்டியநாட்டில் இருந்தனவையே என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்களாகும். 
சிலர் சூளவம்சம் குறிப்பிடும் இந்த சோழகங்கன் & காலிங்கராயன் படையெடுப்பை காலம் குறிக்கப்படாததால், இதனை குளக்கோட்டன் & கலிங்க மாகன் படையெடுப்பாக கொள்வர். இதுவும் சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஏனென்றால் மலையாள தேசத்திலிருந்து 24000 போர் வீரர்களையும் (முக்குவர்), தமிழத்தில் இருந்து அகமுடைய முதளிகளையும், மறவரையும் பணிய வைத்து கொண்டு செல்வது பாண்டியனின் அதிகாரியாக இருந்த குளக்கோட்டனின் செயலாக மட்டும் நிச்சயம் இருக்க முடியாது.சரி. இந்த 60 வன்னியர் (வெள்ளாளர் & மறவர்) மதுரைக்காரர்கள் என்பது தெளிந்ததுபோல் குறிப்பாக பூர்வீகம் எதுவென்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள். மதுரை அருகே உள்ள மாங்குளம் & கொங்கர் புளியகுளம் என்கிறார்கள்.

சமணத்தின் பீடபூமியாக இருந்த இந்த 2 ஊர்களில் எப்படி சைவர்கள் இருக்க முடியும் என்று கேட்டால், சமணரின் கோட்டையாக இருந்த கொங்கர் புளியகுளத்தில் கொங்கர் (கங்கர் - காலிங்கராசன் குடி) குடிபுகுந்து சமணத்தை வேரறுத்து, பின்னர் அங்கிருந்து ஈழம் சென்று பௌத்தத்தை கருவருத்தார்கள் என்று கொள்ளலாம். ஐயகோ இந்த தமிழ் பிசாசுகள் பாதி பௌத்த சாம்ராஜ்யத்தையே அழித்தொழித்துவிட்டார்களே என்று சூளவம்சம் புலம்புவது நினைவுக்கு வரலாம். வங்க தேசத்திலேயே சாளுக்கிய வேளிர் வழிவந்த baidya சாதியை சேர்ந்த சேனா பரம்பரை சோழகங்கர் (கீழைக்கங்கர்) துணைகொண்டு பௌத்ததை பரப்பிய பாலா பரம்பரையையே கருவத்தார்கள் என்பதும் நினைவில் கொள்ளவும்.
இதுபோக ராஜராஜன் காலத்திய சோழகங்கன், பாண்டியனின் அமைச்சர் 3 சோழகங்கர், நிசங்கமல்லனின் மருமகனான சோழகங்கன் என்று அனைவரும் ஒரே பரம்பரை என்ற போதிலும் காலகட்டங்கள் இருப்பிடங்கள் வேறு வேறு. குழம்பவேண்டாம்

அமரசேனன் காலம்:

அமரசேணனின் காலம் தவறாக கொடுக்கப்பட்டிருந்தாலும், குளக்கோட்டனுக்கு பின்னரே சொல்லப்படுகிறார்கள் என்பதாலும், ராமனாட்டு மறவ ராஜ வம்சம் என்று வருவதால், மிகவும் பிற்பட்ட காலம் என்பதில் ஐயமில்லை. 
மட்டக்களப்பு மான்மியம் கூறுவது:
பானுவுக்குப் புத்திரர் ஐவர். புத்திரிகள் இருவர். முதல்புத்திரன் அமரசேனன் என்பவனுக்கு விசயதுவீபத்தை அரசுபுரியும் குடகனுடைய புத்திரி வருணாளியாளைப் பாணிக்கிரணஞ் செய்து வைத்து மட்டக்களப்பையும் பட்டங்கட்டி சில காலத்தின் பின் பரமபதம் அடைந்தான்.
மறவர் பெண்கள் வன்னிச்சிமாரென பெயர் பெற்றது.
அமரசேனன் சரித்திரம் - மறவர் வருகை
தினகர சேனன்றானும் பானுவுக்கரசளிக்க மனுவர முறையாயிந்த மட்டமாங் களப்பையாண்டு புனிதமற ஈன்றமைந்தன் புகழ் பெறுமமரசேனன் பனுவளர் கலியுத்த மூவாயிரத்து நானூற்றி அறுபத்தாறே.
அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி, வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்.
இது மதுரையில் இருந்து வந்த 60 வன்னியரில் தப்பிய 5 பேர் கழலில் மூழ்கிய போது வன்னிச்சிமார் என வழங்கப்பட்டதை தழுவி வருவதாலும், அந்த 60 வன்னியர் பெரும்பாலும் வெள்ளாளர் & சிலர் மறவர் என்பதாலும், தப்பி கடலில் இறந்த 5 வன்னியரும் மறவரே என்று துணியலாம்.

அடுத்து ஈழத்தில் குளக்கோட்டன் & கலிங்க மாகன் வகுத்த வன்னிமைகளை ஆதாரங்களோடு பார்ப்போம்

கங்கா குல திலகன் - குக்கோட்டன் வகுத்த வன்னிமை:

ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. மாகன் போல் அல்லாது குளக்கோட்டன் தன் இனத்தானுக்கே அனைத்து வன்னிமைகளையும் வாரி வழங்கியுள்ளான்

குளக்கோட்டன் திரிகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு 4 வன்னிபங்களை உருவாக்குகிறான். இந்த ஐந்துமே வெள்ளாள வன்னிமைகள். அதில் இருந்து பிரிந்து பல வன்னிபங்கள் உருவாகின்றன. பிரிந்த வன்னிபன்களே அடங்காப்பற்றில் இருந்த வன்னியரை அடக்கியாண்ட வன்னியனார் எனப்படும் வெள்ளாள வன்னிமைகள். இவை அனைத்தையும் நாம் பார்க்கலாம். சிலர் கட்டுக்குளம் வன்னிமையை மறந்துவிடுவார்கள். சிலர் முண்ணீஸ்வர வன்னிமையை சேர்த்தி 6 என்பர். முண்ணீஸ்வர வன்னிபம் பூபால கோத்திர தனியுண்ணா பூபால வன்னியனுக்கு (கலிங்க வெள்ளாளர்) அடங்கிய பற்று என்பதனையே மறந்துவிடுவார்கள். அதற்கு முன்னர் குளக்கோட்டன் உருவாக்கிய 5 வன்னிமைகளை பார்த்துவிடலாம்.

வம்ஷ முதல்வர் பெயர்                                                    - பூர்வீகம்                                        - பெற்ற வன்னிபம் 
1) தனியுன்ணாப் பூபால வன்னிமை                             - மதுரை                                           திரிகோணமலை பற்று
2) செகராசநாத வன்னிமை                                              - காரைநகர்                                    கொட்டியாரம்பற்று
3) காராள சிங்க வன்னிமை                                             - சோழதேசம் (மருங்கூர்)          - தம்பலக்காமம் பற்று
4) நடராஜ குமாரசிங்க வன்னிமை                                 - மருங்கூர்                                      - கட்டுக்குளம் பற்று
5) கட்டுக்குளம் கணகசுந்தரபெருமாள் வன்னிமை - திருநெல்வேலி                           - கட்டுக்குளம் பற்று


தனியுன்ணாப் பூபால வன்னிமை
இந்த தனியுண்ணா பூபால வன்னிமை தனியுண்ணா பூபால வன்னியன் என்ற பூபால கோத்திர வெள்ளாளனின் வம்சாவழி என்று முன்னரே பார்த்தோம். ஆனாலும் சிலர் பூபால கோத்திரம் (கலிங்க வெள்ளாளர்) வேறு, பூபால வன்னிமை வேறு என்று திரிக்கிறார்கள். சிலர் புரியாமல் சொல்கிறார்கள். அதற்காகவே இன்னுமொரு ஆதாரமும் தருகிறேன்.
"இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்" எனும் நூலில் சி. பத்மநாதன் எனும் ஈழத்து மாபெரும் வரலாற்று ஆசான் குறிபிட்டுள்ளதை பாருங்கள். பூபாலக்கட்டில் பூபால கோத்திர வன்னியரே (கலிங்க வெள்ளாளர்) இருந்தனர் என்றும் அவர்களுக்கே கோனேசர் கோவிலில் முதலுரிமை என்றும் கூறியுள்ளார்.

பூபாலகட்டு என்பது பூபால கோத்திரத்தாரின் (கலிங்க வெள்ளாளர்) மாளிகை இருந்த ஊரின் பெயர். பூபாலகட்டில் கோட்டைகட்டி திரிகோணமலையை கோலோச்சினர்.
இவர்களின் 32 தலைமுறை பெயர்களும் கீழே உள்ளது. இவர்கள் (கலிங்க வெள்ளாளர்) சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று குறிக்கப்பட்டது பற்றி ஆய்வாளர்கள் சோழன் பின் பாண்டியன் காலத்திலும் இவர்கள் நிகரில்லா வலிவையுடன் விளங்கியதால் என்று மழுப்பியிருந்தாலும், இதை பற்றி இப்பொழுது நான் பேசமுடியாது. இவர்கள் வம்சம் வாரிசில்லாது போனதால், இவர்கள் காரைநகர் சென்று கங்கா குல வம்சத்தில் ஒரு ஆன் பிள்ளையையும் (செகராசநாத வன்னிமையின் பூர்வீகம்), இவர்கள் பூர்வீகமான மதுரையிலேயே ஒரு வன்னிச்சியை (கலிங்க வெள்ளாள பூபால கோத்திரம்) தேர்ந்தெடுத்து, கூட்டிவந்து கல்யாணம் முடித்து வம்ஷ விருத்தி செய்தார்கள். இன்றும் உள்ளனர். 

இவர்களைப்பற்றி மேலும் அறிய இந்த இணைப்புகளை பார்க்கவும்

செகராசநாத வன்னிமை:
இவர்கள் தான் கொட்டியாரம்பற்று (மூதூர் சுற்று பகுதிகளுக்கு) எஜமானம் பண்ணும் வன்னியர் (காராளர்). இவர்கள் பூர்வீகம் காரைநகர். இந்த காரைநகர் யாழ்ப்பாணத்துக்கு அருகில் கடலோட்டி இருக்கும் காரைநகர் என்று சிலர் கருதினாலும், கொனேசர் கல்வெட்டில் காரைக்கால் என்றே உள்ளது. மேலும் இவர்கள் வம்ஷம் வாரிசற்றுபோனபோது அவர்கள் சோழ தேசம் போய் காராள வம்ஷத்து ஆண் பிள்ளையை தத்தெடுத்தது இவர்கள் பூர்வீகம் காரைக்காலே என்றும் இவர்கள் கார்காத்த வெள்ளாளர் பரம்பரை என்றும் நிரூபணமாகிறது...
இவர்களின் 42 தலைமுறை பெயர்களும் கீழே உள்ளது.

காரைநகர் வன்னிபங்கலான இவர்களே பின்னாளில் கொட்டியாரம்பற்று வன்னிமையை தோற்றுவித்தவர்கள் என்பதற்கு ஆதாரங்களும் உண்டு.

வன்னியனார் என்ற பெயரே இவரை காட்டிக்கொடுக்கவில்லையா இவர் வெள்ளாளர் என்று. இவர் பட்டையம் ஒன்று சிதம்பரம் மடத்தில் உண்டு.

காராள சிங்க வன்னிமை:
நல்லவேளையாக இவர்களின் முதல்வர் பெயர் காராள சிங்கம் என்று இருக்கின்றது, இவர் காராளர் என்பதை நிரூபணம் செய்வதாய் உள்ளது. தம்பலக்காமம் பற்றை கட்டியாண்ட வன்னியர் (காராள சிங்கங்கள்) இவர்கள்தான். இவர்களுக்கு வாரிசற்று போனபோதும், இவர்கள் சொந்த ஊரான சோழதேசத்து மருங்கூருக்கே சென்று பங்காளி வீட்டு காராள ஆண் பிள்ளையை சுசீந்திரம் செய்து வந்துள்ளனர். இதனை கோணீஸ்வரம் கல்வெட்டுகள் செப்புகின்றன.
இவர்களின் 31 தலைமுறை பெயர்களும் கீழே உள்ளது.

நடராஜ குமாரசிங்க வன்னிமை:
தனியுண்ணா பூபால வன்னிமைகள் போலவே இவர்களும் மிக முக்கியமான வன்னிமைகளே. கட்டுக்குளம் வன்னிபத்தை கட்டியாண்ட காராள காளைகள் இவர்கள்தான். இவர்கள் பூர்வீகம் காராள சிங்க வன்னியர் போலவே மருங்கூர்தான். இவர்களில் கொற்றவராச குமாரசிங்க வன்னியன், சித்திரமேழி குமாரசிங்க வன்னியன் போன்ற பெயர்கள் இவர்கள் கொங்கதேச கவுண்ட சாதியின் கொற்றந்தை கூட்ட கிளையாக இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கின்றது. தொண்டை மண்டல சதகத்தில், செஞ்சி நாட்டை கட்டியாண்ட முடியுடை வேந்தன் செஞ்சியர்கோன் கொற்றந்தை எனும் அரசன் பற்றி பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி புலவர் ஒரு கலம்பகம் பாடியிருப்பது, இதனை மேலும் வலுவூட்டுவதாக உள்ளது.
நல்லவேளையாக இவர்களும் தாங்கள் காராளர் என்று கண்டுபிடிக்கும்படி தடையங்களை விட்டுச்சென்றனர். இவர்கள் அழிந்துபட்டாலும், 37 தலைமுகளுக்கு பிறகு குரத்தின குமாரசிங்க வன்னியருக்கு பிறகு வாரிசில்லாமல், பரங்கிப்பயல் காலத்தில் வரலாறிலேயே காணாமல் போயிருந்தாலும் கோணேஸ்வரம் கல்வெட்டுகள் உண்மைகளை உடைத்தன. இவர்களுக்கு பின் கட்டுக்குளம் வன்னிமைகள் (காராளர்) இவர்களின் இடத்தை சேர்த்து நிரப்பினர்.
கட்டுக்குளம் காராளன் கசுந்தரபெருமாள் வன்னிமை:
கலிங்க வெள்ளாள பூபால கோத்திர தனியுண்ணா பூபால வன்னியன் அளவுக்கு குளக்கோட்டனிடம் முக்கியத்துவம் பெற்ற முக்கியமான வன்னிபத்தில் கட்டுக்குளம் வன்னிமையும் ஒன்று. ஆனால் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கண்ணுக்கு இது தட்டுப்படுவது இல்லை. அதனால் குழப்பங்கள் பல எழவும் செய்கின்றன. இனி அது நடக்காது. நான் அவர்கள் கண்ணுக்கு கொண்டு செல்வேன்.
இத்தனைக்கும் கட்டுக்குளம் வன்னிபங்கள் காராளர் என்ற சொல்லவனா ஆதாரங்கள் கல்வெட்டுகளிலும், நூல்களிலும் புதைந்துள்ளது.
கோனேசர் கோவில் கல்வெட்டுகளே இதற்கு அத்தாச்சி. இவர்கள் திருநெல்வேலி காராளர் எனவும், குளக்கோட்டன் இவர்களை அழைத்துவந்து வன்னிபம் அளித்தான் என்றும் கல்வெட்டுகளே சொல்கின்றன.


இவ்வளவு ஏன்? திரிகோனேசல புராணமே சொல்லுதுங்க இவர்கள் காராள குல திலகர் என்று.


கலிங்க மாகன் காலத்தில் அவர் வகுத்த வன்னிமை:

குளக்கோட்டன் வகுத்த வன்னிமை இன்னமும் நடைமுறையில் இருந்தாலும், எப்படியாவது இந்த வரலாறை மறைக்கவேண்டுமே என்று போராடுபவர்கள், இந்த கலிங்க மாகன் என்ற கங்கா குல திலகன் தானே வகுத்த வன்னிமையின் முன் தோற்று வீழ்வார்கள். அவ்வளவு சுவாரசியமானதும், கிட்டத்தட்ட ஈழ வரலாற்றையே உருவாக்கியதும் இந்த வன்னிமையே.
புத்தகத்தில் இருக்கும் முன்னுரை வாசகங்கள் அப்படியே கீழே:
மாகோன் வகுத்த வன்னிமைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. மட்டக்களப்பிலே திருக்கோவில் முதல் வெருகல் வரை, பெரியபோரத்தீவு, கொக்கட்டிச்சோலை உட்பட மாகோன் வகுத்த வன்னிமை சட்டதிட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன
திரிகோணமலை வன்னிமை குறித்த கோனேசர் கோவில் கல்வெட்டு, திரிகோனசல புராணம் இவற்றில் வருவது நினைவுகூரத்தக்கது.
கல்வெட்டுப்பாடலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளாளர் குடி ஏழும் கோ-வைஷ்யர் என்று குறிக்கப்பட்டுள்ளது. பூ-வைஷ்யர் என்றால் உழுவித்துண்ணும் குடியை சேர்ந்த காராளன். கோ-வைஷ்யன் என்றால்? இதை நான் வாய்விட்டு சொல்லவும் வேண்டுமா?


முற்குக வன்னிமைகளில் உள்ள உலகப்போடி குடியை செர்தவகளிடம் உள்ள ஆவணங்களில் இது இன்னொருமுறை உறுதிசெய்யப்பட்டுள்ளது

அடுத்து முற்குக வன்னிமையும் அதன் 7 குடிகளையும் கல்வெட்டும், மான்மியமும் கூறுவதை பார்ப்போம்

கல்வெட்டில் கிடைக்கும் முற்குக & வெள்ளாளர் குடிகள் வெள்ளாளர் குடிகளை கல்வெட்டில் சரிபார்த்த அதே ஏட்டுப்பிரதியிலும் தெளிவாக கிடைக்கின்றது.
மேலே கொடுத்த படத்தை சரியாக பார்த்தீர்களா? 

முற்குகரில் மாளவராசன் குடி இருக்கும். ஆனால் மறவரில் மாளவன் குடி இருக்கும். முற்குகரில் முறண்ட வன்னியன், முண்ட வன்னியன், தண்டவால் முண்ட வன்னியன் போன்ற குடிகள் இருக்கும்மறவரில் முறண்ட & முண்ட குடி இருக்கும்... 

இதிலிருந்தே தெரியலையா முற்குகர் மறவரே. அதாவது மறவர் குடியில் இருப்பது குடிசனம். முற்குக பிரிவில் இருப்பது பட்டக்காரன் / நாட்டான் / தலைவன் / அரசன்

சரி. நீங்க அத பாத்து படிச்சு, --- நேரம் எடுக்கும். கீழுள்ள படத்த பாருங்க. எடுத்து கொடுத்துருக்கேன்.
முண்டன் என்பது மிண்டன் என்பதன் இன்னொரு ஆக்கம். மிண்டன் என்றால் வீரன் என்று பொருள். காமிண்டன் என்றால் காக்கும் வீரன் என்று பொருள். அதே போல் காமுண்டன் என்பதும். கொங்கு வெள்ளாளர்களுக்கு காமிண்டன் என்ற பெயர்தான் கவுண்டர் என்று மாறியது போல.

அடுத்து வன்னிமைகளை கொடுக்குறேன் பாருங்க. இதுதான் ரொம்ப முக்கியமானது. வன்னியன் யார் என்று உண்மையை உடைக்கும்
என்ன இது வேளாளர் வன்னிமை நு ஆச்சர்யப்படாதீங்க. குளக்கோட்டன் வகுத்த வன்னிமை மொத்தமும் வெள்ளாளர் (வன்னியர்) தான். நினைவிருக்கட்டும். 
அது எல்லாம் சரி. வேளாள வன்னிமையில் கொங்கு வெள்ளாளனை ஏன்  முதலாக தூக்கி வைத்துள்ளான் கலிங்க மாகன்? கேளிவி வருமே. கங்கா குலத்தவன் தன இனத்தானை தவிர வேறு யாருக்கு வன்னிமையை தருவான்? காரைக்காட்க்கு வெள்ளாளரும் (கார்காத்தார்) இடம் பெற்றிருப்பது சிறப்பு. மேழி வெள்ளாளர் வேறு யாருமில்லை. சோழ நாட்டில் இருந்து கொங்கு நாட்டில் கொங்கு வெள்ளாளரோடு இணைந்த காராளக்குடிகளே. மருங்கூர் வெள்ளாளர் என்பார் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர். இவர்கள் சைவ வெள்ளாளர் / சுத்த வெள்ளாளர்கள். குளக்கோட்டான் மருங்கூரில் இருந்து அழைத்துவந்த வன்னியரில் மருங்கூர் சுத்த வெள்ளாளர் இவர்களே. மருங்கூர் என்பது நாகை அருகேயும் உள்ளது, கடலூர் அருகேயும் உள்ளது. இது பின்னால் உருவானவை. சிலர் கார்காத்தாரில் ஐக்கியமாகி அங்கே பொய் ஊர் அமைத்திருக்கலாம். கன்யாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு அருகே உள்ள மருங்கூர் சங்க காலத்திலும் இடம் பெற்றுள்ளது. மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் புலவராய் இருந்துள்ளார். இவர் சைவ வெள்ளாளராகவே இருந்திருக்க முடியும்.

இந்த வன்னிமையில் வந்தவர்தான் பண்டார வன்னியன்.
பொருங்க பொருங்க. அதுக்குள்ளே போயிட்டா எப்புடி. இந்த முற்குக வன்னிமை மறவர்கள் யாருன்னு பாக்க வேண்டாமா?
மட்டக்களப்பு மான்மியம் - நாமவியல் (பக்கம் 7) சொல்வது:
மட்டக்களப்பு மான்மியம் கூறுவதன்படி மட்டக்களப்பு எனும் பெயர் காரணப் பெயராக அமைந்துள்ளது. இலங்கைமீது படையெடுத்த வட இந்திய முற்குகர், கிழக்குப் பக்கம் தமது ஓடத்தைச் செலுத்தி, மட்டக்களப்பு வாவியின் எல்லை வரை சென்று, அதற்கு அப்பாற் செல்ல வழியில்லாததால் இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக்களப்பு இதுவரையும்தான்) எனக் கூறி மட்டக்களப்பு எனும் பெயரை இட்டனர்.
இந்த மறவர் வட இந்தியாவில் இருந்து வந்தனர் என்று நூலில் குறிப்பிட்டிருப்பது கலிங்கத்தை. ஆனால் கலிங்க மாகன் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வன்னியரையும் (அகமுடைய வெள்ளாளர்) மறவரையும் அழைத்துவந்தான் என்பதும் உண்மை தான். முற்குகர் கலிங்கத்தில் இருந்து வந்தனர் என்பதும் உண்மைதான். எது எப்படியானாலும் மறவர் மறவர்கள்தான்



- இந்த பதிவு இன்னமும் முற்றுபெறவில்லை. இந்த பதிவே இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. தொடர்வேன்